சேவையும் ஆலோசனையும்…(சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!)

அவந்திகாவை அடிப்பீர்களா சாரு என்று கேட்டார் இல்லையா என் மஹாத்மா நண்பர்? அந்தக் கேள்விக்கு இணையான கேள்வி எது என்று நான் சென்ற கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். காரணம், முப்பது ஆண்டுகளாக நான் அவந்திகாவை புதுமைப்பித்தன் எழுதிய செல்லம்மாள் கதையில் வரும் பிரம்மநாயகம் பிள்ளை எப்படித் தன் மனைவி செல்லம்மாளை கவனித்துக்கொள்கிறாரோ அப்படித்தான் நானும் அவந்திகாவை முப்பது ஆண்டுகளாக கவனித்து அவளுக்கு சேவை செய்து வருகிறேன். சிங்கப்பூருக்கு மூன்று மாத வீசாவில் சென்றிருந்தேன். இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கும். அவந்திகாவுக்கு … Read more

ஆசிரியனும் சகபயணியும்…

கோவாவில் நடந்த புருஷன் நாவல் வெளியீட்டு விழா உரையில் ஃபாத்திமா பாபு சொல்கிறார்கள் நீங்கள் அராத்துவின் குரு என்று. Grand Narrative பற்றிய ஒரு விடியோ பதிவில் உங்களை குரு, குருநாதர் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள். நான் என்ன சொல்லி உங்களை அழைப்பது? எனக்குப் பெரிய குழப்பமாக இருக்கிறது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு தோழி. அன்பே, நீ என்னை எப்போதும் இறைவரே என்றுதான் அழைக்கிறாய். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.  நான் அசோகமித்திரனை என் … Read more

Further Reading: புருஷன், சாரு, சி. மணி

அராத்துவின் புருஷன் படித்துக்கொண்டு இருக்கிறேன். நூற்றைம்பது பக்கங்கள் தாண்டியுள்ளேன். நூறு பக்கங்களைத் தாண்டியுவுடன் ஒளியின் வேகத்தில் செல்கிறது. அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் Further reading என்று மேலும் சில கட்டுரைகளைப் படிக்க இணைப்பு கொடுத்திருப்பார்கள் (bibliography அல்ல). இந்தச் சிறுகுறிப்பை further reading-ஆக அணுக வேண்டுகிறேன். புருஷன் வெளியீட்டு விழாவில் சாருவின் உரையை அராத்து டிவியில் நேற்று பார்த்தேன். சாருவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், பேசும்போதும் புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். மன நோய் … Read more

தரமான தாம்பத்திய வாழ்வுக்கான கையேடு (வயது வந்த ஆண்களுக்கு மட்டும்!)

இந்தப் பதிவை பெண்கள் படிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இதில் நான் சொல்லப் போகும் ஆலோசனைகள் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அரிய உண்மைகள் என்பதால் இதற்கான கட்டணத்தை நன்கொடையாகவோ சந்தாவாகவோ எனக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.  இல்லாவிட்டால் இது எதுவும் பலிக்காமல் போய் விடக் கூடிய அபாயம் இருக்கிறது. 1.நீங்கள் சுமார் பதின்மூன்று வயதிலிருந்து பாலியல் தளங்களைப் பார்த்து கரமைதுனம் செய்யப் பழகியிருப்பீர்கள். இப்போது இருபத்தெட்டு வயதில் திருமணம் முடித்த பிறகு … Read more

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையாதீர்…

புத்தக விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். வயது இருபத்து மூன்று. அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சளியும் இருமலுமாக இருந்திருக்கிறது. நான் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு அவரிடம் சென்றிருக்கிறார். பாஸ்கரனின் மருந்தில் ஒரே மாதத்தில் அவருடைய நீண்ட காலப் பிரச்சினை சரியாகி விட்டது என்றார். சரியாகி மூன்று மாதம் ஆகிறது, திரும்ப வரவே இல்லை என்று மேலும் சொன்னார். அவருடைய மனைவிக்கு அவர் வயதுக்கு வந்த நாள் முதல் குருதிப்போக்கு நாட்களில் … Read more