பூச்சி 102

நேற்று சீனியிடம் பேசினபோது இந்த அம்மா விஷயம் பற்றி ஒருசில அவதானிப்புகளைச் சொல்லி, எனக்கும் ஒருசில விஷயங்களை ஞாபகப்படுத்தினார்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் மூலவியாதியால் மிகவும் அவஸ்தைப் பட்டேன்.  அதற்கு அவந்திகா ஒரு கை வைத்தியம் பண்ணினாள்.  அப்போது நாங்கள் சின்மயா நகரில் வசித்தோம்.  மூலத்துக்குப் பன்றிக்கறி மருந்து.  அதிலும் அதில் உள்ள வார் என்ற பகுதி.  பன்றிக்கு தோலிலிருந்து உள்ளே சதைப் பகுதிக்குப் போவதற்கு முன்னால் இடையில் பட்டையாக ஒரு பகுதி கொழுப்பாக இருக்கும்.  … Read more

பூச்சி 101

அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய சமஸ் அவர்களுக்கு, இந்தக் கடித விஷயத்தை நான் உங்களுக்கு ஒரு போன் மூலம் தெரிவித்திருக்க முடியும்.  ஆனாலும் இது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய விஷயமாகத் தோன்றியதால் திறந்த மடலாகவே எழுதி விட்டேன்.  என் வாழ்நாள் பூராவுமே மறக்க முடியாத இரண்டு நேர்காணல்கள் உண்டு.  ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த மகாப் பெரியவரின் நேர்காணல்.  பத்திரிகையாளர் கேட்கிறார், சுவாமி, உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா?  எப்பேர்ப்பட்ட மனிதரிடம் … Read more

பூச்சி 100

என் எழுத்தைப் படித்தவுடனேயே பல கடிதங்கள் எழுதி எனக்குத் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் பெரியவர் பாலசுப்ரமணியன்.  இன்று அவரிடமிருந்து ஆறு ஏழு கடிதங்கள்.  அதில் ஒன்று, அம்மா பற்றி.  என் அம்மா பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தேன்.  அவந்திகாவை அம்மா அவமதித்து விட்டதால் பல ஆண்டுகள் அம்மாவையே பார்க்கவில்லை என்று.  ஆனால் நம் சாஸ்திரங்கள் அப்படிச் சொல்லவில்லை. அம்மா எப்படி இருந்தாலும் அம்மா அம்மாதான்.  ஒருபோதும் அம்மாவை விட்டுக் கொடுக்கக் கூடாது.  இந்தக் கடிதத்துக்கு மட்டும் … Read more

பூச்சி 99

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தத்துவத்தின் பக்கம் போனால் விலாசமின்றிப் போய் விடுவோம் என்று எழுதியிருந்தேன்.  உண்மைதான்.  பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீட்சிதர் என்ற ஒரு பிரமாதமான தத்துவ ஆசிரியர் இருந்தார்.  இந்திய வேதாந்தத்தை அப்பைய தீட்சிதரைத் தவிர்த்து விட்டு யாரும் கடக்க முடியாது.  மிகவும் ஒரு வண்ணமயமான வாழ்வை வாழ்ந்தவர்.  அவரைப் பற்றி நான் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றே நினைத்திருந்தேன்.  ஏனென்றால், ஒருமுறை ”மது அருந்தினால் நம் உள்ளுக்குள்ளே உள்ள கெட்ட விஷயங்களெல்லாம் வெளியே … Read more

பூச்சி பற்றி வளன் அரசு

பூச்சி தொடரை இன்னொரு முறை மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். பல வருடங்களாக சாரு இணையத்தில் எழுதினாலும் இந்தத் தொடரைத்தான் நான் முழுவதுமாக இணையத்தில் வாசிக்கிறேன். பழுப்பு நிறப் பக்கங்கள் மற்றும் ஒளியின் பெருஞ்சலனம்போன்றவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னைப் பொருத்த வரை அவைகள் இரண்டும் வழிகாட்டிகள். அவை இணையத்தில் வாசித்த சமயம் அதில் சொல்லப்பட்டிருக்கும் புத்தகங்களையும் படங்களையும் தேடிப் பார்த்தும் படித்துமே போனது. பூச்சியும் நல்ல வழிகாட்டிதான் ஆனால் அதை மீறி ஒரு கொண்டாட்டம் இருக்கிறது. பூச்சி 100ஐ தொடும் போது எப்படிக் கொண்டாடலாம் என்று … Read more

பூச்சி 98

I was astounded by the range of books you have read on what can I call it philosophy.  How without a guru? You may have your own reasons for not writing simplifying  these treatises. One existing poor readership or the dryness of subject for the majority. People with less than half your knowledge, roam  as … Read more