ரோலக்ஸ் வாட்ச் – கார்ல் மார்க்ஸ் மதிப்புரை

நிறைய அலைச்சல்களுக்கு இடையில் சமீபத்தில் வாசித்த நாவல் ரோலக்ஸ் வாட்ச். புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு வேகத்தில் போகிறது. வெளியீட்டு விழாவில், இந்த நாவலை ‘பின் நவீனத்துவ கிளாசிக்’ என்றார் சாரு. பின் நவீனத்துவத்தில் ஏது கிளாசிக் என்றார்கள் நண்பர்கள். போகட்டும். நாம் நாவலுக்கு வருவோம். தமிழில் நாவல் எனும் வடிவத்துக்கு கட்டமைக்கப்பட்டதொரு வரையறை இருக்கிறது. சிறந்த நாவல்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் பத்து நாவல்களை எடுத்துக்கொண்டால், நாம் அவற்றுக்குள் பொதுத்தன்மை ஒன்றைக் … Read more

புத்தக விற்பனையில் சாதனை

Wecanshopping.com குஹன் முகநூலில்: மார்ச் மாதம் எங்களிடம் அதிகம் விற்பனையான டாப் 10 புத்தகங்கள்!! 1. எங்கே உன் கடவுள் ? – http://bit.ly/1Repdhu 2. பழுப்பு நிறப் பக்கங்கள் – http://bit.ly/1WRVnDJ 3. கடைசிப் பக்கங்கள் –  http://bit.ly/1nahoS6 4. இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள – http://bit.ly/1Y3gm72 5. அறம் பொருள் இன்பம் –  http://bit.ly/1Qnz5pr 6. இச்சைகளின் இருள்வெளி – http://bit.ly/1oRXi0s 7. வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் … Read more

சால்சா – அராத்து

வுட்டதைப் புடிச்சிடுவோம் ……. வயதான பிறகும் வாழ்கை இருக்கிறது. நாங்கள் மிஸ் செய்ததையெல்லாம் இப்போது செய்யப்போகிறோம் என்ற அறைகூவல்களை சமீப காலமாக கேட்டுக்கொண்டு உள்ளோம். 70 வயது பாட்டி இப்போதுதான் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதையும் , 75 வயது தாத்தா தற்போதுதான் களறியோ சால்ஸாவோ கற்றுக்க்கொள்வதையும் சிலாகித்து எழுதிய கவர் ஸ்டோரிகளையும் புள்காங்கிதத்தோடு படித்திருப்போம். தாத்தாவும் பாட்டிக்கும் அள்ள அள்ளக் குறையா வாழ்கை இருக்கிறது என்பதோ , எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை. … Read more

இச்சைகளின் இருள்வெளி – ஒரு மதிப்புரை

இச்சைகளின் இருள்வெளி நூலுக்கு டாக்டர் ஸ்ரீராம் மதிப்புரை எழுதியுள்ளார். *** நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும். மேலும் படிக்க: http://sriramintamil.blogspot.in/2016/03/blog-post_24.html

Charu Nivedita – An Installation by N.Srinivasan

புத்தக வெளியீட்டு விழா அரங்கில் ஓவியர் ஸ்ரீனிவாசனின் installation பற்றி டாக்டர் ஸ்ரீராம் எழுதியுள்ளார். “சாரு, வலது கீழ் மூலையில் ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?” என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், “எடுக்க சொல்லிருங்க,” என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, “ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; … Read more

விழா பதிவுகள் – 30

உமா ஷக்தி முகநூலில், 28.2.16 அன்று எழுதிய பதிவு:   புகைப்படம்: பிரபு காளிதாஸ் சாரு எழுதிய அத்தனை புத்தகங்களையும் நான் படித்ததில்லை. ஆனால் ராஸ லீலா உட்பட முக்கியமான புத்தகங்களை படித்துள்ளேன். சாருவின் எழுத்தில் என்னை எப்போதும் கவர்வது தங்குதடையில்லாத எவ்வித மனத்தடையும் (inhibitions) இல்லாத ஒரு மொழிநடை. பிரவாகமாக, எளிமையாக, மிகவும் நேரடியாக நம்முடன் உரையாடும் மொழி அவருடையது. அவருடைய புதிய எக்ஸைல் நூறு பக்கங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு முழுவதும் … Read more