6. நடனம்

இதுவரை எனக்குத் தெரியாத பெண்களோடுதான் நடனமாடியிருக்கிறேன் அது ஒரு நிழலோடு ஆடுவது போல கனவோடு ஆடுவது போல. சட்டென நிழல் நிஜமாகி வந்ததுபோல் வந்தாய். நடனமாடலாமா என்றதற்கு நடனம் பிடிக்காது என்றாய். மீண்டும் நிழல்கள் என் கரம்பற்றி அழைத்தன. நடனத்தைத் தொடர்கிறேன் நான்…

5. வாக்குமூலம்

இந்த வயதில் இப்படி ஒரு விபரீதம். ஊருக்கொரு காதலியொடு இறுமாந்திருந்தேன் எண்ணினால் ஒரு டஜனுக்கு ஒன்று குறையலாம் கடைசியாய் வந்ததொரு மோகினிக்குட்டி மந்திர தந்திர சூக்ஷுமம் அறியேன் ஒருத்திக்கு ஒருவன் என்றது குட்டி பதினோரு காதலிகளுக்கும் இறுதி வார்த்தைகளை நல்கினேன் குட் பை

4. வெற்றிடம்

நீ இல்லாமல் போனால் நீ இருந்த இடத்தை என்ன செய்யட்டும் எனக் கேட்கிறாய் தஸ்தயேவ்ஸ்கி அனா இருவரின் கதை சொன்னேன் திரும்பவும் கேட்கிறாய் ”நீ இல்லாத வெற்றிடத்தை என்ன செய்யட்டும் நான்?” என் பெயர் நிகானோர் பார்ரா என்கிறேன்

3. எப்போதாவது எழுதுபவனின் கவிதை

”எழுதாதவன் எழுதியிருக்கும் கவிதை எப்படியிருந்ததென்று சொல்” என்றேன். ”நட்சத்திரங்களின் காலம் கற்பனையில் எட்டாதது புழுக்களின் காலம் கண் சிமிட்டலில் முடிந்து போகும் கண் சிமிட்டும் காலத்தில் நட்சத்திரங்களை வாழ்ந்திருக்கிறாய் ஒரு அதிசயத்தை எப்படியென்று யாரால் விளக்க முடியும் அன்பே?” என்கிறாய்.

கனவு

எனது நிறைவேறாத கனவு ஒன்று உண்டென்றால் அது பியானோ கலைஞனாக வேண்டும் என்பதுதான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட அது பற்றி மிகவும் யோசித்தேன். சாந்தோமில் என் வீட்டுக்கு எதிரே பியானோ கற்பிக்கும் பள்ளி இருந்தது. அலையவே வேண்டாம். ஆனால் தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சி ஸ்கேல்ஸ், விரல் பயிற்சி மற்றும் டெக்னிக். இரண்டாவதுதான் கடினம், ஸைட் ரீடிங். இது முன்னதாகவே பயிற்சி எடுக்காமல் கண் முன்னே நோட்ஸை வைத்துக்கொண்டு … Read more

2. நிழலிலி

1 வாழ்நாள் எல்லாம் எழுதுகிறேன் சிலருக்குப் பிடித்தது சிலருக்குப் பிடிக்கவில்லை 2 பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காகக் குடித்தேன் குடிகாரன் என்றார்கள் தனிமையை விரட்டப் பெண்கள் நாட்டம் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஆயிரம் நிழல்கள், ஆயிரம் கவலைகள் எனக்கே எனக்கென ஒருத்தி கிடைத்தாளில்லை கிடைத்தவளும் அன்பைக் கையிலெடுத்துக்கொண்டு சுழற்றிச் சுழற்றி அடித்தாள் படுகாயமுற்றேன். 3 கேட்டதைக் கொடுக்கும் என் கர்த்தாவிடம் ’அதிகாலையின் ஆதவனைப் போல நிலவின் சஞ்சாரத்தைப் போல நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் போல தென்றலின் இனிமையைப் போல குழந்தையின் முதல் … Read more