புத்தக விழா மகாத்மியங்கள் (2)

ஆஹா, ஆஹா, முறுக்கு கிடைத்து விட்டது. ஆம், என் மனம் கவர்ந்த முறுக்கை எனக்கு ஆசை ஆசையாகத் தின்னக் கொடுக்கும் செந்தில் குமரன் சேலத்திலிருந்து சென்னை வந்து விட்டார். முறுக்கும் கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த மாதிரி முறுக்கை நீங்கள் உலகத்தில் வேறு எங்கேயும் சாப்பிட்டிருக்க முடியாது. சென்னை முறுக்கெல்லாம் முறுக்கே கிடையாது. செந்தில், ஒரு முக்கிய விஷயம். பா.ராகவன் எதிரில் முறுக்கைப் பிரித்து விடாதீர்கள். அந்த ஆளும் என்னை மாதிரிதான் ஒரு சாப்பாட்டுப் பிரியன். முறுக்கை சனியன் சனியன் என்று திட்டிக் கொண்டே பிரித்து மேயக் கூடியவர். பெருமாள் கொஞ்ச நாள் அவரை பேலியோ பக்கம் அனுப்பியிருந்தார். இப்போது பேலியோவுக்கு லீவு போல. மற்றபடி அராத்து, காயத்ரி எதிரிலெல்லாம் கொடுக்கலாம். அராத்துவுக்குத் தீனி மீது பிரேமை கிடையாது (எதில்தான் இருந்தது?) காயத்ரி பாதி சுண்டு விரல் அளவுதான் எடுத்துக் கொள்வாள்.

ரகசியமாக என்னை அழைத்து கொடுக்கவும். நான் வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்வேன்.