கோவா சந்திப்பு

மார்ச் 23ஆம் தேதியிலிருந்து 27 காலை வரை (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) கோவாவில் இருப்பேன். அராத்துவும் இருப்பார். எங்காவது கடல் ஓர கிராமத்தில் தங்கலாம் என்று யோசிக்கிறேன். ஹைதராபாத் சந்திப்பு பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உள்ளன. நேரம் இல்லை. பல வேலைகளை ஒன்றாகப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். ஹைதாராபாதில் நிகழ்ந்த சந்தோஷங்களில் சில: நண்பர் பிரபு ராமை பதின்மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்தது. புதிய நண்பர்களான கணபதியையும், இன்பராஜையும் சந்தித்தது.

கோவாவில் என்னைச் சந்திக்க நினைக்கும் நண்பர்கள் நான்கு நாட்களும் நான் தங்கியிருக்கும் இடத்திலேயே தங்க விருப்பப்பட்டாலும் நலம். அல்லது, வேறு இடத்தில் தங்கிக் கொண்டு மாலையில் சந்திப்பதாக இருந்தாலும் சரி. உங்கள் விருப்பம். யார் வேண்டுமானாலும் வரலாம். எந்த நிபந்தனைகளும் இல்லை. சினிமாவுக்கு ஏன் எழுதுவதில்லை என்பது போன்ற தத்துவார்த்தமான கேள்விகளைக் கேட்காமல் இருந்தால் நன்றி சொல்வேன். அவ்வளவுதான்.

சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் எனக்கோ அராத்துவுக்கோ எழுதலாம்.

charu.nivedita.india@gmail.com