ஆபாசக் கடிதங்கள்…

ஜெயமோகனின் எழுத்து அன்பையும் அஹிம்ஸையையும் மட்டுமே சொல்லுகின்றன என்று நான் நம்புகிறேன்.  ஆனால் ஜெயமோகனின் வாசகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் மட்டுமே எனக்கு மிக மிக ஆபாசமான கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  நேரிலும் படு ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள்.  எனக்குப் புரியவே இல்லை.  ஐந்து நிமிடம் முன்பு ஜெயமோகன் வாசகரிடமிருந்து ஒரு நீண்ட ஆபாசக் கடிதம் வந்துள்ளது.  அதை நான் இங்கே பகிர விரும்பவில்லை.  சில ஜெ. ரசிகர்கள் என் மனைவி அவந்திகாவைக் கூட ஆபாசமாகத் திட்டி எழுதுகிறார்கள்.  அவர்களுக்கு அவந்திகா அம்மா வயது என்று எனக்குப் புரிகிறது.  ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது.  மனக்கஷ்டமாக இருக்கிறது.  நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.  அதைச் செய்கிறேன்.  ஜெயமோகனின் தீவிர வாசகர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் எழுதும் இந்த ஆபாசக் கடிதங்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.  சாமிகளா நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.  செய்து விடுகிறேன்.

ஆனால் ஒரு விஷயம் ரொம்ப ஆச்சரியம்.  ஜெயமோகனைப் படித்து எப்படி இந்த அளவுக்கு மிருகமாக மாறுகிறார்கள் என்று புரியவே இல்லை.  நீ வா போ, வாடா போடா என்றெல்லாம் விளித்து ஒரு ஆள் எழுதியிருக்கிறார் இப்போது.  கொடுமை…

சரி… தம்பிகளா… நான் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர வேண்டும் என்று சொல்கிறீர்களா?  சேர்கிறேன்…  அப்போதாவது ஆபாசக் கடிதம் எழுதாமல் இருப்பீர்களா?  எல்லா கடிதங்களையும் குப்பையில் சேர்த்து விடுவேன்.  இந்தக் கடிதத்தை மட்டும் வைத்திருக்கிறேன்.  மிக நீண்ட ஆபாசக் கடிதம் என்பதால்…