ஒரு மாதிரிக்கு…

தினமும் குறைந்தது பத்து ஆபாசக் கடிதங்கள் வருகின்றன.  பேசாமல் மெயில் ஐடியையே ரத்து செய்து விட்டு ரஜினி, கமல் மாதிரி தொடர்பு எல்லைக்கு வெளியே போய்  விடலாமா என்று தோன்றுகிறது.  ஆனால் ஒரு விஷயம் ஆச்சரியப்படுத்துகிறது.  ஜாலியாகவும் இருக்கிறது.  என் எழுத்து எத்தனை பேருக்கு மன உளைச்சலைத் தருகிறது, தேள் கொட்டுவது போல் இருக்கிறது, உடம்பில் பூரான் நெளிவது போல் இருக்கிறது, தோல் வியாதி வந்தது போல் இருக்கிறது!!!   நம்முடைய எழுத்து இத்தனை பேரையா துன்பப்படுத்துகிறது என்று நினைத்தாலே பரவசமாக உள்ளது.  ஆயிரம் வார்த்தைகளுக்கு எல்லாம் ஆபாசக் கடிதம் எழுதுகின்றார்கள்.  எவ்வளவு வேதனையும் கோபமும் எரிச்சலும் துவேஷமும் இருந்தால் இப்படி எழுத முடியும்?  இணையம் தரும் சுதந்திரம் தானே?  நேரில் ஒருவரைப் பார்த்து டேய் என்று நீங்கள் அழைக்க முடியுமா?  இதோ மின்னஞ்சலில் அழைக்கிறார்கள்… மாதிரிக்கு ஒரு கடிதத்தைத் தருகிறேன்.  இந்தக் கடிதம் மட்டுமே கொஞ்சம் டீஸண்ட்டாக உள்ளது… மற்ற கடிதங்களில் ஜனனேந்திரியங்களின் பெயர்களும் என் வீட்டுப் பெண்களைப் பற்றியும் உள்ளதால் பிரசுரிக்க முடியவில்லை.  இவர்கள்தான் மூன்று வயதுக் குழந்தையை வன்கலவி செய்பவர்கள்.  நேற்று என் பக்கத்து வீட்டிலிருந்து குய்யோ முய்யோ என்று அபாயக் குரல் கேட்டது.  அங்கே ஒரு 70 வயதான கிழவி தான் வாச்வுமனாக இருக்கிறார்.  மற்றவர்கள் அனைவரும் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்.  ஓடிப் போய்ப் பார்த்தால் ஒரு ஆள் அந்தக் கிழவியை வன்கலவி செய்ய முயன்றிருக்கிறான்.  சத்தம் கேட்டு ஓடி விட்டான்.  அவனைப் போன்றவர்கள்தான் எனக்கு ஆபாசக் கடிதம் எழுதுகிறார்கள்.  இதோ அப்படி ஒருவனின் கடிதம்.  இவன் பெயர் ஏகன்.  தம்பி ஏகா, நான் தினமும் நாகேஸ்வர ராவ் பார்க்கில் காலை ஆறு மணிக்கு வாக்கிங் போவேன்.  அங்கே என்னிடம் நீ நேரில் வந்து இதைச் சொல்.  நான் எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமாம்.  ரவுடி மிரட்டுகிறார்.  டேய் ஏகா, நான் எழுதுவதை நிறுத்த ஒரே ஒருவருக்குத்தான் திறமை உள்ளது.  அவர் பெயர் எமதர்மன்.  நீ எமதர்மனாக முடியாது…

எலே சாரு,
உனக்கு ஆபாச கடிதம் வருதா?காமெடி பண்ணாத!நீ எழுதாத ஆபாச புத்தகங்களா?அதான் உனக்கு திரும்பி வருது.எழுதுவதை நிறுத்திக்கொள்.அதுதான் நீ சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய சேவை…புரிஞ்சிதா?

aegan026@rediffmail.com

Comments are closed.