ஞாயிற்றுக் கிழமை : 14 டிஸம்பர் : தி இந்து வாசகர் விழா

ஞாபகப்படுத்துகிறேன்.  நாளை காலை ஒன்பதரை மணிக்கு எத்திராஜ் கல்லூரி அரங்கில் தி இந்துவின் வாசகர் திருவிழாவில் நீதிபதி கே. சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் கார்த்தி ஆகியோருடன் அடியேனும் பேசுகிறேன்.  நண்பர்கள் வரவும்.

நாளை மாலை எட்டு மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் சர்வதேச இசைக்கலைஞர்கள் பற்றிப் பேசுகிறேன்.

அடுத்து, வரும் 25-ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட் அரங்கில் மனுஷ்ய புத்திரனின் அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதைத் தொகுதி பற்றிப் பேச இருக்கிறேன். நண்பர்கள் வரவும்.