கண்ணதாசன் விருது

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் கவியரசர் பிறந்தநாளையொட்டி

கலைத்துறையிலும் இலக்கியத் துறையிலும் முத்திரை பதிப்போருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்பட்டு  வருகின்றன.  விருதுகள் இரண்டு பெருமக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் ரொக்கத் தொகை மற்றும் பட்டயம் கொண்டதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால்நிறுவப்பட்டுள்ளது.

2019 ஆம்  ஆண்டுக்கான விருது எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா, பின்னணிப் பாடகர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது

16.09.2019 அன்று கோவையில் இவ்விழா நிகழ்கிறது.  இதற்கு முன் கண்ணதாசன் விருதுகள் பெற்றோர் விபரம்:

எழுத்தாளர்கள் திரு. அசோகமித்திரன், திரு.வண்ணதாசன், திரு.ஜெயமோகன், கவிஞர் சிற்பி, திரு.கலாப்ரியா, திரு.நாஞ்சில்நாடன்,

திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.மாலன் ஆகியோரும், கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் திருமதி.பி.சுசீலா,  திருமதி .வாணி ஜெயராம், திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம்திரு.சீர்காழி சிவசிதம்பரம், திருமதி. டி.ஆர்.எம்.சாவித்திரி, பதிப்பாளர் திரு பி.ஆர்.சங்கரன், கவிஞரின் உதவியாளர் திரு. இராம.முத்தையா ஆகியோரும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர்

-மரபின் மைந்தன்முத்தையா

செயலாளர் -கண்ணதாசன் கழகம்

கண்ணதாசன் கழகத்தின் இந்த ஆண்டு விருதை அடியேனுக்கு வழங்க முடிவு செய்த கழக அமைப்பினருக்கும் அதன் செயலாளர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் நன்றி.  இந்த விருதுக்கு என் பெயரைப் பரிந்துரை செய்த நண்பர்களுக்கும் என் நன்றி.  இது பற்றி நண்பர் ஜெயமோகனோடு அளவளாவிக் கொண்டிருந்த போது “பலரும் உங்கள் வயது ஃபிஃப்டி ப்ளஸ் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பல விருதுகள் உங்களுக்குக் கிடைக்காமல் போக அது கூட காரணமாக இருக்கலாம்” என்றார்.  அமெரிக்க வீஸா மீண்டும் மறுக்கப்பட்டதால் சற்றே சோர்வுடன் இருந்த போது ஜெயமோகனின் வார்த்தைகள் பழைய உற்சாகத்தை வரவழைத்து விட்டன.  ஒன்று தெரிந்து கொண்டேன்.  திரும்பத் திரும்ப அமெரிக்க வீசா எனக்கு மறுக்கப்படுவதன் காரணம், அமைப்பு சாராத என் தனிப்பட்ட நண்பர்களின் தனிப்பட்ட அழைப்பை தூதரக அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இல்லை.  இனிமேல் வீசாவுக்கு விண்ணப்பித்தால் அமைப்பு சார்ந்த அழைப்பின் பேரில்தான் செய்ய வேண்டும்.  ஆனால் அதற்கு நான் திண்டுக்கல் லியோனியாக மாற வேண்டுமே, முடியுமா?

கண்ணதாசன் கழக விருதை எனக்கு வழங்க பரிந்துரை செய்த நண்பர்களுக்கும் கண்ணதாசன் கழகத்துக்கும் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் மீண்டும் என் நன்றி.  வாழ்த்து தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும் என் பிரத்தியேக நன்றி.  ஒரு நண்பர் வாழ்த்து தெரிவித்த போது பரவச நிலையில் பேசினார்.  உங்கள் அன்புக்கு என் நன்றியை மேலும் மேலும் எழுதுவதன் மூலம் பிரதி செய்வேன்.  என் எழுத்துக்கு உறுதுணையாக நிற்கும் என் அத்தனை வாசகர்களுக்கும் இந்தப் பரிசை சமர்ப்பணம் செய்கிறேன்.  மேலும் ஒரு விஷயம்.  இதுதான் என் எழுத்து வாழ்வில் கிடைக்கும் முதல் விருது!!!

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai