2014-இல் எழுதிய ஒரு சிறிய குறிப்பு

ராஸ லீலா பிழைதிருத்தம் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு இடத்தில் வகங்களும் என்று இருந்தது.  அதை வனங்களும் என்று மாற்றினேன்.  இருந்தாலும் ஒரு சம்சயம்.  நெட்டில் தேடலாம் என்று அந்தப் பத்தியின் ஆரம்பமான ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ என்று தட்டச்சு செய்தேன்.  பின்வரும் சிறிய குறிப்பு சாருஆன்லைனில் 2014-இல் எழுதியிருந்தது வந்தது.  கடவுளே, இனிமேலாவது என் எழுத்தைத் திரும்பவும் பிழைதிருத்தம் செய்யாமலிருக்க அருள் பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.  பின்வரும் குறிப்பு சாருஆன்லைனில் நவம்பர் 2, 2014 அன்று எழுதியது:

ராஸ லீலா என்ற என்னுடைய நாவல் சரியானபடி வாசகர்களைச் சென்றடையவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.  அதை இப்போது சரி செய்து விடலாம்.  அதன் இரண்டாம் பதிப்புக்கு இப்போது நான் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  சுந்தர் ஸ்ரீனிவாஸ் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார், ராஸ லீலாவுக்குத் தனியாக ஒரு ரீடர் போடலாம் என்று.  ரீடர் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒரு புத்தகத்தை எப்படிப் படிப்பது என்ற பயிற்சியை அளிக்கும் நூல் என்றும் ஒரு பொருள் உண்டு.  ராஸ லீலாவை ஒருவர் படித்து முடித்து விட்டேன் என்று சொல்லவே முடியாது.  அது ஒரு maze-ஐப் போல் கட்டமைக்கப்பட்ட பிரதி.  ஒரு பிரதிக்குள் ஏகப்பட்ட உப பிரதிகள் உங்களை எங்கெங்கோ இழுத்துக் கொண்டே செல்லும்.  அந்த நாவலுக்குள் செல்வது ஒரு தீராத பயணம் போல.  அதில் வரும் உப பிரதிகள் பற்றியே தனியாக ஒரு பட்டியல் போடலாம்.  இன்றைய தினம் அந்த நாவலின் சுபானு வருடப் பலன் என்ற அத்தியாயத்தைப் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த போது அதர்வ வேதம் காண்டம் 9, ஸூக்தம் இரண்டு, காமன் ஸ்லோகங்கள் 20-24 என்ற பகுதியை மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ, எத்தனை தூரம் அக்கினியுண்டோ, நீ அவற்றிற்கெல்லாம் உயர்ந்தவன்.  காமா! அத்தகைய உனக்கு நான் வணக்கமளிக்கிறேன்.

திசைகளும், பிரதிசைகளும் எத்தனைப் பெரியனவோ வானங்களும் ஜோதிக் காட்சிகளும் எத்தனைப் பெரியனவோ, அவற்றிற்கு அதிகமான நீ சதா பெரியவன்.  காமா! அத்தகைய உனக்கு நான் வணக்கமளிக்கிறேன்.

தேனீக்களும் வௌவால்களும் குரூருக்களும் எத்தனையுண்டோ, வகங்களும் மரப் பாம்புகளும் எத்தனையுண்டோ, அவற்றிற்கெல்லாம் நீ அதிகன். சதாப் பெரியவன்.  காமா! அத்தகைய உனக்கு நான் வணக்கமளிக்கிறேன்.

இந்த இடம் வந்ததும் ஒரு சீரிய வாசகனை இந்தப் பிரதி அதர்வ வேதத்தின் காமன் என்ற அத்தியாயத்துக்கு இட்டுச் சென்று விட வேண்டும்.  இங்கே இரண்டாம் பத்தியில் வரும் வகம் என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை.  ஜம்புநாதனின் உரையைப் பார்த்தேன்.  அதிலும் வகங்களும் என்றே குறிப்பிட்டிருந்தது.  அச்சுப் பிழையா என்று யோசித்தேன்.  பிறகு நிகண்டைப் புரட்டினேன்.  வகம் என்றால் குதிரை, வாகனம், திசை என்ற மூன்று பொருள்கள் இருந்தன.  ஆக, இங்கே வகங்களும் என்றால் குதிரைகளும் என்று பொருள்.

ஓரிரு தினங்களில் பிழை திருத்தம் முடிந்து விடும்.  முதலில் என்னை உயிரோடு திரும்பக் கொண்டு வந்த அன்பு நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.  அது ஒரு பெரிய கதை.  அதனால் பிழை திருத்தம் முடித்து விட்டு வருகிறேன்.  அதுவரை அடியேனை மன்னியுங்கள்.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai