விநோத ரஸ மஞ்சரி (2)

சீனி ஒரு சம்பவம் சொன்னார்.  அவர் அடிக்கடி மலேஷியா செல்பவர்.  பலமுறை மலேஷிய நண்பர்கள் அவரிடம் செல்லமாகக் குறைபட்டுக் கொண்டார்களாம்… ”என்னா தல எங்க ஊர்ப் பக்கம் வந்தா சொல்லக் கூட மாட்டேன்றிங்க… முன்னாடியே சொன்னீங்க வந்து பாத்து கவனிப்போம்ல.” சீனி இளைஞர்.  அதனால் இந்த விஷயத்தில் என் அளவுக்கு அனுபவம் இல்லை.  அதனால் அந்த நண்பர்களின் வார்த்தைகளை நிஜமென்று நம்பி அடுத்த முறை முன்கூட்டியே சொல்லி விட்டார்.  ஒருத்தரிடமிருந்தும் பதிலே இல்லை.  ஒருத்தர் என் பொண்டாட்டிக்குத் தலைவலி.  டாக்டரண்ட அழைச்சிட்டுப் போய்க்கிட்டு இருக்கேன்.  இன்னொருத்தர், என் மச்சினன் ஊர்லேர்ந்து வந்துருக்கான்.  அவனோட மால்ல இருக்கேன்.  எப்டியும் சந்திச்சிர்லாம் தல. 

இப்படியே சாக்குப்போக்குகள்.   தல தல என்று சொன்னவர்கள் ஒரு ஆள் கூட தலை காட்டவில்லை.  இரவு ஒன்பது மணி வாக்கில் வந்த ரெண்டு பேர் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டையும் காலி பண்ணி விட்டுப் போயிருக்கிறார்கள். 

இதை எதற்குச் சொன்னேன் தெரியுமா?  நிச்சயம் அமெரிக்கா வருவேன். ஏனென்றால், என் நெருங்கிய நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் அமெரிக்கா போய் விட்டார்.  இந்நேரம் நியூயார்க்கை நெருங்கிக் கொண்டிருப்பார்.  எஸ்.ஓ.டி.சி. மூலம் ஒரு சார்ட்டட் டூர் மூலம் வந்து அங்கே கொஞ்ச நாள் இருந்து விட்டு வருவார்.  சார்ட்டட் டூர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வீசா கொடுத்து விடுகிறார்கள்.  அப்படி வரும் போது மேலே சீனிக்குக் காண்பித்த ஆடு புலி ஆட்டமெல்லாம் எனக்கு ஆடிக் காட்டக் கூடாது.  ஏனென்றால், நான் என் செலவில் வருகிறேன்.  இதுவே ஒரு தமிழ்ச் சங்க அழைப்பிதழைக் காண்பித்திருந்தால் உடனே வீசா கிடைத்திருக்கும்.  தமிழ்ச் சங்க அன்பர்களோ திண்டுக்கல் லியோனிக்கும் பல மிமிக்ரி ஆர்ட்டிஸ்டுகளுக்கும்தான் அழைப்பு அனுப்புவார்கள்.  லியோனி வருடத்துக்கு இரண்டு முறை அமெரிக்கா போகிறாராம்!  சரி, விஷயத்துக்கு வருகிறேன்.  அமெரிக்கா வந்தால் தமிழ்ச் சங்கத்தில் பேச அழைப்பார்கள்.  செலவில்லை பாருங்கள்.  என் செலவில் வந்திருக்கிறேன்.  பேச அழைப்போமே?  அப்படி அழைத்தால் எனக்கு 1000 டாலர் கொடுக்க வேண்டும்.  அது ரொம்பக் கம்மி.  ஐம்பது பேர் வருவார்களா?  ஆளுக்கு இருபது டாலர்.  நியூயார்க் நகரில் இருபது டாலர் என்பது இரண்டு பேருக்கான டின்னர் செலவு இல்லையா?  (குடி இல்லாமல்!) டிப்ஸ் எவ்வளவு வைப்பீர்கள்?  இரண்டு டாலர்?  ஆக, கணக்கு சரிதான்.  எனவே சும்மா வந்து பேசுங்கள், வீட்டுக்கு வந்து சாப்பிடுங்கள்… இந்தக் கதையே வைத்துக் கொள்ளக் கூடாது.  ஏனென்றால், நான் என் செலவில் வருகிறேன்.  ஏனென்றால், ஓரிருவரைத் தவிர அமெரிக்காவிலிருந்து யாருமே கட்டணம் கட்டுவதற்கோ ராஸ லீலாவின் ஸ்பெஷல் எடிஷன் வாங்குவதற்கோ தயாராக இல்லை. அது கூடப் பரவாயில்லை.  ராமசேஷன் போன்ற நண்பர்கள் கேலி பேசும் அளவுக்கு வாழ்கிறார்கள் அமெரிக்கவாழ் தமிழர்கள்.  பைசாவுக்கு சிங்கி அடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிலிருந்து 19 பேர் ராஸ லீலா ஸ்பெஷன் எடிஷனுக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள்.  அமெரிக்காவிலிருந்து ஒரே ஒரு நண்பர் அனுப்பியிருக்கிறார் ஐயா.  ராமசேஷன் ஏன் கிண்டல் செய்தார் என்று புரிகிறதா?  இப்படி மற்றவர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கா வாழ்கிறீர்கள்!!!  காலையில் சிரித்துக் கொண்டே கேட்டார், அமெரிக்காவிலிருந்து யாருமே ரெஸ்பாண்ட் செஞ்சிருக்க மாட்டார்களே?  அதனாலேயே இப்படிச் சொல்கிறேன்.  மேலும் இப்போதெல்லாம் paypal-இல் பணம் அனுப்புவது மிகச் சுலபமான விஷயம். பணம் உண்டு; மனம் இல்லை.  அவ்வளவுதான்.  அப்படி வாழ்வதை நான் மதிக்கிறேன்.  நாம் நம் விருப்பப்படிதான் வாழ வேண்டும்.  ஆனால் நேரில் பார்க்கும் போது ஜிகிலா வேலை காட்டக் கூடாது. அவ்வளவுதான்.  மேலும், பணமே முக்கியம் என்று வாழ்பவர்கள் எனக்கு போன் செய்து ஏன் ஐயா டார்ச்சர் கொடுக்கிறீர்கள்?  சரி, இன்னொரு கேள்வி. ஜக்கி வாசுதேவைப் பார்ப்பதற்கு மட்டும் பெரும் காசு கொடுக்கிறீர்கள் அல்லவா?  அப்படியென்றால் எழுத்தாளன் மட்டும் கேணப்…. பயலா?

எழுத்தாளன் என்றால் யார் என்று மஹாப்பெரியவர் கூறிய வியாக்கியானத்தை இங்கே மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்:   

கலா என்ற சம்ஸ்கிருத வார்த்தை, கலை என்ற தமிழ் வார்த்தை, கல்ச்சர் (கலாச்சாரம்) என்ற ஆங்கில வார்த்தை, கொலே என்ற ஃப்ரெஞ்ச் வார்த்தை – எல்லாவற்றுக்கும் ஒரே பொருள்தான்.  கலா என்றால் வளர்தல்.  சந்திர கலை.  பிறை வளர்வது போல் கலையினால் நம் மனம் வளர்ச்சி அடைவதால் அது கலை.  மேலும் சொல்கிறார் பெரியவர்: ”உயர்ந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பல கலைகளாக உருவெடுக்கிறது.  ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு விதமாக.  சில்ப ரூபமாக, சித்திர ரூபமாக, நாட்டிய ரூபமாக, சங்கீத ரூபமாக, காவிய ரூபமாக, தியாக ரூபமாக, சேவை ரூபமாக, தான ரூபமாக இப்படிப் பல உருவங்களாக உயர்ந்த எண்ணம் வெளிப்படுகிறது.  இந்த உயர்ந்த எண்ணம் மிகவும் உயர்ந்து விரிந்து எடுக்கும் உருவமே, எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்.  உலகம் முழுக்கவும் ஒன்றாகி விட வேண்டும் என்று எண்ணுகிற அன்பில் பிறப்பதே மிகப் பெரிய பண்பாடு.  இதுவே தலையாய கலை. 

ஒரு தேசம் என்று இருந்தால் அதில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லாரும் இருப்பான்.  இருந்தாலும் ’இந்த தேசத்தில் பண்பு இருக்கிறது, இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்’ என்று தெரிந்து கொள்வது எப்படி?  ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதித்து விட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா?  அதேபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது.  ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும்.  ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.”

பாருங்கள், மகாகவி என்று சொல்லிவிட்டு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக ‘இலக்கியக் கர்த்தா’ என்று வேறு சொல்கிறார்.  அடுத்து, ஒரு இலக்கியவாதி எப்படி இருப்பான் என்று வர்ணிக்கிறார்.  ”தனது என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான்.  உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டுவான்.  அதை உலகம் எடுத்துக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை.  பயனை எதிர்பார்க்காதவன் அவன்.  ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின் மகாகவியின் வாக்குதான்.”

இதையெல்லாம் நான் சொல்லவில்லை.  மகாப்பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திர சேகரேந்திர சுவாமிகள் சொல்கிறார். 

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai