போட் கிளப்

நேற்றைய குறிப்பில் போஜன் பற்றி அதிகம் எழுதவில்லையே என்று ராமசேஷன் சொன்னார்.  வாஸ்தவம்தான்.  நாகேஸ்வரராவ் பூங்காவின் எதிரே வலது கைப்பக்கம் போனால் ஒரு சந்துக்குள் நுழையும்.  அங்கே ஃபோர்க் மாதிரி வலது இடது என்று இரண்டு பாதைகள் பிரியும்.  போட் கிளப் போட் கிளப் என்கிறார்களே, அதற்கு சவால் விடுவது போல் இருக்கும் அந்த இடம்.  ம்ஹும்.  உடனே போட் கிளப் மாதிரி மாட மாளிகை என்று கற்பனை செய்து விட வேண்டாம்.  போட் கிளப்பில் நடப்பது எப்படிய்யா இருக்கு என்று கேட்டார் சா. கந்தசாமி.  ஜாலியோ ஜாலி.  அழகிகள்.  அழகிகளை மிஞ்சும் அழகழகான நாய்கள்.  ரிட்டயர்ட் மந்திரிகள். (அன்பாகப் பேசுகிறார்கள்!)  ஆனாலும் கந்தசாமியிடம் ரொம்ப depressingஆ இருக்கு சார் என்றேன்.  ஏன் என்றார்.  எல்லாம் ஒரே அரண்மனை மயமாக இருக்கு என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டேன்.  அவரும் அதற்கு மேல் கேட்கவில்லை.  என்ன விஷயம் என்றால், ரெண்டு வருடத்துக்கு ஒருமுறை மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு வீடு தேடி அலைய வேண்டியிருக்கிறது.  இதற்கிடையில் 5000 புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகம் வேறு.  அதைக் கொண்டு போய் வேறு வீட்டில் சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.  தொழிலாளர்கள்தான் அதைச் செய்கிறார்கள் என்றாலும் அதை அடுக்குவது நான் தானே? 

போட்கிளப்பில் ஒரு ’அரண்மனை’யைக் காண்பித்து வாசலில் என்ன பெயர் என்று படியுங்கள் என்றார் ராமசேஷன்.  சேஷசாயி என்றேன்.  யார் இவர் தெரியுமா என்றார்.  தெரிலியே என்றேன்.  சேஷசாயி மில்ஸ் இருக்கு இல்லியா, அதன் ஓனர் என்றார்.   சோற்றுக்கு ஒரு பதம்.  (தப்பா நினைக்காதீங்க.  அடிக்கடி  ஸ்டாலின் பேச்சைக் கேட்டதால் வந்த வினை!) இப்படித்தான் மெட்றாஸ் சிமெண்ட், சன் டிவி, ஹெச் சி எல் என்று பலவிதமான நிறுவன முதலாளிகளின் குடில்கள் நிரம்பியுள்ள இடம் போட் கிளப். 

போட் கிளப் என்றால் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வராமல் இருக்கவே இருக்காது.  அவர் ஒரு முன்னாள் ஹீரோ நடிகர். பணத்தில் கெட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நெருங்கின நண்பர்.  (பார்த்திபன் அல்ல; பார்த்திபன் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்பவர்.)  ஒருநாள் அவர் பேசிக் கொண்டிருக்கலாம் என்று என்னை பார்க் ஷெரட்டன் வரச் சொன்னார்.  சினிமா ஹீரோ என்பதால் செம கதைகளெல்லாம் சொல்லுவார்.  எதையுமே வெளியே சொல்லவோ எழுதவோ முடியாது.  ஆனால் படு சுவாரசியமான கதைகள்.  மதியம் மூன்று மணிக்கு வரச் சொன்னார்.  நடிகர் தண்ணி அடிக்க மாட்டார்.  நான் இரண்டே முக்காலுக்கே சென்று லௌஞ்சில் காத்திருந்தேன்.  சரியாக மூன்று மணிக்கு ஹீரோவிடமிருந்து போன் வந்தது.  சாரு வெளியே வா.  போனேன்.  காரில் இருந்தார்.  அவரேதான் ஓட்டினார்.  உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன், வா என்றார்.  அது போட் கிளப்.  போட் கிளப் என்றால் போட் கிளப் என்ற ஏரியாவில் இருக்கும் போட் கிளப் என்ற கிளப் அல்ல.  போட் கிளப் ஏரியாவில் ஒரு தெருவில் உள்ள ஒரு வளைவு.  அங்கே காரை நிறுத்தி விட்டு தான் வாங்கி வந்திருந்த இரண்டு ஐஸ் க்ரீம் குவளைகளை எடுத்துக் கொடுத்தார்.  நடந்து பத்து ஆண்டுகள் இருக்கும்.  அப்போதெல்லாம் போட் கிளப் இத்தனை ஆர்ப்பாட்டமாக இல்லை.  ஆள் நடமாட்டமே இல்லாமல் அம்போ என்று இருக்கும்.  அந்தத் தெரு முக்கில் நாங்கள் நின்று ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆள் வந்து சாமானை வெளியே எடுத்து சிறுநீர் போனான்.  நான் கொஞ்சம் திரும்பி நின்று கொண்டேன். 

இப்போது வாக்கிங் போகும் போது அந்த முக்கைத் தாண்டும் போதெல்லாம் அந்த சாமான் தரிசனமும் ஹீரோவின் அக்குறும்பும் ஞாபகம் வருகிறது.  ஏன் ஐயா, ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்கு வேறு இடமா கிடைக்கவில்லை?  அன்றைய தினம் முடிவு செய்தேன்.  இனிமேல் தண்ணி அடிக்காதவர்களோடு சங்காத்தம் வைத்துக் கொள்வதில்லை என்று.  (இப்போது நானே தண்ணி அடிப்பதில்லையே?  யோசிக்க வேண்டும்.)

சரி, ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.  நாகேஸ்வர ராவ் பூங்காவின் வலது பக்கம் திரும்பினால் சட்டென்று ஒரு ஒன்வே வரும்.  அதையும் தாண்டினால் லஸ்ஸிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் ராதாகிருஷ்ணன் சாலைக்காக நம் இடது பக்கம் திரும்பும்.  வாகனங்களுக்கு வலது பக்கம்.  நேராகப் போனால் லஸ் சிக்னல்.  ஆனால் நாம் நேராகப் போகாமல், ராதாகிருஷ்ணன் சாலைக்குப் போகும் திருப்பத்தை விட்டு விட்டு கொஞ்ச தூரம் போய் இடது பக்கம் திரும்பினால் அந்த fork பாதைகளைப் பார்க்கலாம்.  அதில் நாம் வலது பக்கத்தை எடுக்க வேண்டும்.  (இன்னும் கொஞ்சம் போனால் முன்பு காமதேனு சினிமா தியேட்டர் இருந்ததே, அந்த இடம் வரும்.)  இந்த இடமெல்லாம் குட்டி குட்டி பங்களா வீடுகள்.  அல்லது அந்த மாதிரி அபார்ட்மெண்ட்டுகள்.  அமைதி என்றால் தியான மையங்களின் அமைதி அல்லது silent valley மாதிரியான அமைதி.  ஒரு சந்து முட்டு சந்து.  அநேகமாக பிராமணர்கள் மட்டுமே வாழும் பகுதி என்று நினைக்கிறேன்.  அங்கேதான் போஜன் இருந்தது.  ஆம். இருந்தது.  நானும் ராகவனும் ராமசேஷனும் அங்கேதான் தினமும் போய்க்கொண்டிருந்தோம்.  ஆ, ஒரு விஷயம் மறந்து விட்டேன்.  ராகவன் சனி, ஞாயிறுகளில் மட்டும்தான் சாப்பிடுவார்.  மற்றபடி வெறும் காஃபிதான். 

போஜனை மூடி விடுவார்கள் என்று எனக்கு முதல் வாரமே தெரிந்து விட்டது.  போஜனில் டிஃபன் எல்லாம் அமர்க்களமாக இருக்கும்.  சீச்சி… அதனால் மூடி விடுவார்கள் என்று யூகிக்கவில்லை.  அவர்கள் நடத்தும் முறை அப்படி இருந்தது.  எட்டு மணிக்குத்தான் திறப்பார்கள்.  ஒருநாள் மூடியிருக்கும்.  ஒருநாள் திறக்கும்.  இப்படி ஒழுங்கு இல்லாமல் இருந்தால் உணவகம் நடத்த முடியாது.  அடிக்கடி மூடுவார்கள்.  அப்புறம் ஒரேயடியாக பூட்டு போட்டு விட்டார்கள்.  ஆனால் ஒரு முக்கியமான விஷயம்.  அந்த போஜனிலும் கூட காஃபி நன்றாக இருக்காது.  அது எப்படித்தான் எல்லா பிராமணாள் ஓட்டலிலும் காப்பியை இப்படி மோசமாகப் போடுகிறார்களோ! 

இன்றைய தினம் நானும் சேஷனும் – சேஷனுக்கு நேரம் இருந்ததால் – காவேரிக்கு எதிரில் உள்ள ஒக்கடே போனோம்.  பாவி, ஆறின இட்லியைக் கொடுத்து விட்டான்.  கோபத்தில் ரெண்டு இட்லியோடு முடித்துக் கொண்டு டிப்ஸும் கொடுக்காமல் வந்து விட்டேன்.  ஆனால் அவன் கொடுக்கும் காஃபிக்காக மன்னிக்கலாம்.  ஆஹா, என்ன ஒரு காஃபி! 

நாளைய காலை உணவை பெருமாள் எந்த இடத்தில் எழுதியிருக்கிறாரோ பார்ப்போம்…

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai