ஜனவரி 4

வெளியூர் வாசகர்களின் வசதிக்காகவும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  ஜனவரி 4-ஆம் தேதி சென்னையில் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் நாவல் வெளியிடப்பட உள்ளது.  பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.  நானும் பேசுவேன்.  அந்த நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுங்கள்.  இந்த ஆண்டு என் நூல் எதுவும் வரவில்லை.   தற்கொலைக் குறுங்கதைகளையே நீங்கள் என்னுடைய நாவலைப் போல் வாசிக்கலாம்.  இதை ஏன் நாம் எழுதாமல் போனோம் என்று பொறாமை கொள்ள வைத்த கதைகள்.  ஜனவரி 4 சந்திப்போம்.

இடையில் டிஸம்பர் 17, 18 தேதிகளில் பொள்ளாச்சி அருகில் உள்ள பெரும் வனம் ஒன்றில் வாசகர் வட்ட நண்பர்களை சந்திக்க இருக்கிறேன்.  டிஸம்பர் 18 என் பிறந்த தேதி.  புதியவர்கள் யாரையும் சேர்ப்பதாக இல்லை.  போன வாரம் கூட ஒரு புதியவரால் பெரும் பிரச்சினை ஆகி விட்டது.  அது ஒரு சிறுகதை போல் எழுதப் பட வேண்டியது.

Comments are closed.