படித்தேன் பார்த்திபன்.
மனநோய் பற்றி. அதுவும் ஜலதோஷம், ஜூரம் மாதிரி ஒரு நோய் தான். ஆனால் மனசுக்கு வரும் நோய். அதைக் கண்டு நாம் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. இந்த நோய் ஒரு கட்டத்தில் எனக்கும் வரலாம்; யாருக்கும் வரலாம். வந்தால் என்ன? மருந்து இருக்கிறது. குணப்படுத்திக் கொள்ளலாம். மனநோய் ஒன்றும் எய்ட்ஸ் அல்ல. இது வரைக்கும் நமக்குத் தெரியும். ஆனால் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், மனநோயாளிகள் ஆரோக்கியமானவர்களைப் போல் நடமாடி மற்றவர்களுக்கும் அந்த மனநோயைப் பரப்புவதும், மனநோயாளிகள் தங்களை ஆரோக்கியமானவர்களாக நினைத்துக் கொண்டு நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு நீதி வழங்கிக் கொண்டிருப்பதும்தான். அந்த ஆள் அதைத்தான் செய்தார். இதுதான் ஃபாஸிஸம். இதைத்தான் ஹிட்லர் என்ற மனநோயாளி செய்தான். மற்றபடி மனநோயாளிகள் நம்முடைய நண்பர்கள்தான்; அன்புக்குரியவர்கள்தான். ஆனால் அவர்கள் தங்களை நீதிமான்களாக எண்ணிக் கொண்டு சகட்டுமேனிக்கு எல்லோருக்கும் மரண தண்டனை விதித்துக் கொண்டிருக்கும் போதுதான் நாம் குறுக்கிட்டு அவர்களைத் தடுக்க வேண்டியிருக்கிறது. இந்த விஷயம் பின்னூட்டத்தில் மிஸ்ஸிங்.
மேலும், நான் பிச்சை எடுப்பது பற்றி. எனக்கு கைகால் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 20 புத்தகங்கள் எழுதி வெளியிட்டேன். உலகில் ஒரு எழுத்தாளன் கூட (ஜெயமோகனைத் தவிர) இந்த அளவுக்கு எழுதியதில்லை. இவ்வளவு எழுதியும் இதன் மூலம் வரும் ராயல்டி பைசா பற்பசை வாங்குவதற்குக் கூட போதவில்லை என்பதால்தான் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன். உங்களுக்குப் பின்னூட்டம் எழுதிய மரமண்டைக்கு இதை எத்தனை தடவை சொன்னாலும் புரியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? மேலும், என்னை இண்டெர்நெட் பிச்சைக்காரன் என்று எழுதியவர்களுக்கு பணப்பெட்டிகள் வருகின்றன. எனக்கு அப்படியெல்லாம் வருவதில்லை. என்னுடைய ஒரே பலம், என் வாசகர்கள், நண்பர்கள். மேலும், பணம் அனுப்புங்கள் என்று எழுதுவதை நிறுத்தி நான் பலகாலம் ஆகிறது. இப்போது வேண்டிக் கொள்வதெல்லாம் என் புத்தகங்களை வாங்குங்கள் என்பதுதான். அந்த வகையில் என்னை இனிமேல் அவர்கள் முன்னாள் பிச்சைக்காரன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் நான் 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஜேப்படித் திருடனாகவும் வாழ்ந்திருப்பதால் என்னை முன்னாள் திருடன் என்றும் சொல்ல வேண்டியிருக்கும்.
15.7.2010.
7.35 a.m.
