To You Through Me (4)

முதலில் நகுலனின் நாவல்களை எடுத்து வைத்துக் கொள்வோம் என்று என் புத்தக அடுக்குகளில் தேட ஆரம்பித்தேன்.  இரண்டு முழு தினங்கள் ஆயின.  முதலில் இவர்கள் என்ற நாவல் சிக்கியது.  1983-இல் வெளிவந்தது.  வெளியீடு நர்மதா பதிப்பகம்.  விலை ஒன்பது ரூபாய்.  அடுத்து சில அத்தியாயங்கள் என்ற மிகச் சிறிய புத்தகம்.  26 பக்கம்தான்.  சில அத்தியாயங்கள் என்று போட்டு பிராக்கட்டில் நாவல் என்று உள்ளது.  சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில். இதை நவம்பர் 1984-இல் வாங்கியிருக்கிறேன். இதில் நகுலனின் வீட்டு விலாஸம் உள்ளது.  நகுலன், T.C. 9/71, Golf Links Road, Kaudiar East, Trivandrum 695 003.  இந்த வீட்டுக்கு நான் போயிருக்கிறேன்.  வீட்டைக் கண்டு பிடிக்க ரொம்ப சிரமப்பட்டேன்.  நகுலனை அப்போதுதான் முதலும் கடைசியுமாகப் பார்க்கிறேன்.  அந்த அனுபவத்தை என் உரையில் சொல்கிறேன்.  ஏப்ரல் 1983இல் வெளியான நூல்.  சோபிதம் பதிப்பக உரிமையாளர் டாக்டர் கே.கே. சுந்தரசோபிதராஜ், எம்.ஏ., பிஹெச்.டி. 

நகுலனின் நாவல்கள்

நிழல்கள் (1965)

ரோகிகள் (1968)

நினைவுப்பாதை (1972)

நாய்கள் (1972)

நவீனன் டயரி (1978)

இதற்குப் பிறகு எழுதியது சில அத்தியாயங்கள்.  இதற்கு மேலும் இரண்டொரு நாவல் எழுதியிருக்கிறார்.  இதில் நினைவுப் பாதை தவிர வேறு எதுவுமே என்னிடம் இல்லை என்பதை இரண்டு நாட்கள் என் புத்தக அடுக்குகளோடு போராடிய பிறகு தெரிந்து கொண்டேன்.  இருந்தன.  நண்பர்களிடம் கொடுத்திருப்பேன்.  திரும்பி வந்திராது.  இப்போது சந்திப்பில் எப்படிப் பேசுவது?  கிளாஸிக்ஸ் என்றாலே காலச்சுவடுதான் ஞாபகம் வரும்.  போன் போட்டேன்.  ட்ரிப்ளிகேன் ஆஃபீஸ்தானே என்று கேட்டேன்.  இல்ல சார், நாரோயில் ஆஃபீஸ் என்று அழுத்தந்திருத்தமான நாகர்கோவில் உச்சரிப்பில் சொன்னார் ஒரு பெண்.  அதற்குள் இன்னொரு ஃபோனில் ஒரு அழைப்பு வந்து விடவே அதில் பேசினார்.  பெரிய விசாரிப்பு போல.  இரண்டு நிமிடம் ஆகி விட்டது.  வைத்து விடலாமா என்று யோசித்தேன்.  ஆனால் விஷயத்தின் முக்கியத்துவம் காத்திருக்கச் செய்தது.  அப்புறமாக வந்து சாவகாசமான தொனியில் என்ன வேண்டும், எங்கேயிருந்து பேசுகிறீர்கள் போன்ற சமாச்சாரங்களைக் கேட்டார்.  எனக்குத் தேவை திருவல்லிக்கேணி அலுவலகத் தொலைபேசி எண்.  அங்கே ஆபீஸ் திறப்பதில்லை என்றார் அந்தப் பெண்.  பிறகு நகுலன் புத்தகங்கள் வேண்டும் என்று சொன்னேன்.  இருக்கு சார், நித்ய கன்னி இருக்கு என்று இன்னும் ஒரு புத்தகத்தின் பெயரை ஆரம்பிக்கவே நான் குறுக்கிட்டு அது எம்.வி. வெங்கட்ராமுங்க என்றேன்.  ஓ, ஆமாம், ஆமாம் என்று நகுலனின் கவிதைகள்தான் இருக்கிறது என்றார். 

பிறகு நற்றிணை யுகனுக்கு ஃபோன் போட்டேன்.  நற்றிணையில் நகுலனின் எல்லா நாவல்களும் வெளிவந்திருப்பது அப்போதுதான் எனக்கு ஞாபகமும் வந்தது.  ஆனால் அவருடைய அலுவலகமும் ஊரடங்கில் மூடியிருப்பதாகச் சொன்னார்.  சரி, வீட்டில் இருந்தால் கொடுங்கள் என்றேன்.  வெளியூரில் இருப்பதாகச் சொன்னார்.  ஆனாலும் ஒரு ஆளை அனுப்பி வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார்.  தாராளமாக என்றேன்.  நாளைதான் அவருக்குத் திரும்பவும் போன் செய்து புத்தகங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  கேரளத்தில் புத்தகக் கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களை வாங்கவே எவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது என்பதற்காக இதைச் சொன்னேன்.  புத்தகங்களை வாங்க வேறு எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.  முக்கியமாக நவீனன் டயரி, வாக்குமூலம், நாய்கள் மூன்றும் தேவை.    

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai