7. To You Through Me – நகுலன்

வரும் 28-ஆம் தேதி ஞாயிறு காலை ஆறு மணி (இந்திய நேரம்) சந்திப்புக்காகத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் பூச்சி இல்லை.  ஆனால் எழுத நிறைய விஷயங்கள் உள்ளன.  நேற்று இரவுதான் நினைவுப் பாதையை முடித்தேன்.  நினைவுப் பாதையை முடிக்க ஏன் மூன்று நாட்கள் ஆனதென்றால், இடையில் தேவாரத்தையும் விட்ஜென்ஸ்டைனையும் (Wittgenstein) படிக்க வேண்டியதாயிற்று.  விட்ஜென்ஸ்டைன் என் ஆதிகாலத்து குரு.  விட்ஜென்ஸ்டைனை நான் 1978-இலிருந்து 1984 வரை தில்லியில் உள்ள செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகத்தில்தான் படித்தேன்.  என்னை உருவாக்கிய alma materகளில் அந்த நூலகம் முக்கியமானது.  பொதுவாக அரசு நூலகங்கள் பாடாவதியாக இருக்கும்.  அதிலும் செண்ட்ரல் செக்ரடேரியட் நூலகம் வெறும் அரசு நூலகம் அல்ல.  அரசு அலுவலர்களுக்கான நூலகம்.  அதை எப்படி இந்த அளவு நவீனமாக வைத்திருக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.  அங்கேதான் லெவி ஸ்த்ராஸின் Savage Mind மற்றும் லூயி அல்தூஸ்ஸரின் நூல்கள் போன்றவற்றைப் பயின்றேன். மேலும், சார்த்தரின் அத்தனை நூல்களும் அங்கே இருந்தன.  அப்படி ஒரு அற்புதமான  நூலகத்தை இன்றளவும் நான் இந்தியாவில் பார்த்ததில்லை.  ஜே.என்.யூ. நூலகம், இண்டியா இண்டர்நேஷனல் செண்டர் நூலகம் இரண்டையும் நான் பார்த்ததில்லை. 

நீங்கள் நகுலனை இதுவரை படித்திருக்காவிட்டாலும் என் உரையைக் கேட்க வரலாம்.  நகுலனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றும், புரியாத எழுத்தாளர் என்றும் சொல்வார்கள்.  என்னுடைய நகுலன் உரை புரியாமல் இருக்காது.  நகுலன் அப்படியான எழுத்தாளரும் அல்ல.  என் உரை நகுலனை உங்களுக்கு மிக அருகே கொண்டு வருவதாக இருக்கும்.  அதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

நகுலன் பற்றிய உங்கள் வினாக்களை எனக்கு அனுப்பலாம்.  வளன் அரசு ஒரு கேள்வியை, ஒரு குறிப்பை அனுப்பியிருக்கிறார்.  அது கீழே.

நகுலனும் அவர்களது சமகாலத்தவர்களுக்கும் இலக்கிய முன்னோடிகள் (பாரதி தவிர) தமிழ் மொழியில் இல்லையா?

நகுலனின் ஒரு சில கவிதைகளைப் படிக்கும்போதும் நாவலில் பெரும்பாலான இடங்களைப் படிக்கும்போதும் சர்ரியலிச சித்திரங்கள் கண்முன் வந்துபோகின்றன. எனவே நகுலனின் எழுத்துக்களை சர்ரியலிச எழுத்து என்று வகைப்படுத்தலாமா?

தத்துவவியல் படித்தபோது Wittgenstein அறிமுகம் கிடைத்தது. நகுலனின் நினைவுப்பாதையில் நிறைய முறை Wittgenstein வந்து போகிறார். Wittgenstein-ஐ அறிந்திருந்தால்தான் நகுலனை புரிந்துகொள்ள முடியுமா? அதேபோல நினைவுப்பாதையில் சுசீலாவைப் பற்றிப் பேசும்போது யாரோ ‘பிரகிருதியின் சூழ்ச்சி’ என்கிறார்கள். இந்திய தத்துவங்கள் கூறும் பரிணாமக் கொள்கையை ஒற்றை வரியில் கூறிவிட்டார். பெரும் தரிசனமாக இருந்தது. இப்படி Philosophical Background கொண்டுமட்டும்தான் நகுலனை புரிந்துகொள்ள முடியுமா?

எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று நகுலனை அழைக்கிறார்கள். கடந்த ஏழு வருடங்களாகப் புரியவில்லை என்றாலும் நகுலனை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். எப்போது நகுலனை வாசிக்கும்போதும் மனதிற்கு ஒரு நெருக்கம் கிடைக்கும். அவர் மனதில் தோன்றுவதை எழுத்தாக அமைக்கிறார் என்பது தெரிகிறது. மனதில் தோன்றும் வார்த்தைகள் எழுத்தாகும்போது அல்லது பேசும்போது மற்றவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற வரைமுறையை மீற நகுலன் இப்படி எழுதுகிறாரா? (நினைவிப்பாதையின் கடைசி அத்யாயத்தில் பாதி இப்படிதான் புரியாமல் போகிறது).    

Topic: Session with Charu – நகுலன்
Time: Jun 28, 2020

06:00 AM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://zoom.us/j/9205225069?pwd=SHhzUTVwNlNyc3crbjl5TGsvc1VYdz09

Meeting ID: 920 522 5069
Password: 7Xed4N

அதே நடைமுறைகள் தான்:

  1. Zoom-ல் இருக்கும் வரம்புகளின் காரணமாக 100 நபர்கள் மாத்திரமே பங்குபெற இயலும். இது ‘முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை’ போன்றது. அதாவது முதலில் இணையும் 100 நபர்கள் சந்திப்பில் பங்குபெறலாம். மற்றவர்களால் இயலாது.
  2. சந்திப்பு சரியாக காலை 6 மணிக்குத் தொடங்கியவுடன், சதீஷ்வரனும் நானும் மாத்திரம் unmute-ல் இருப்போம். இணையும் மற்றவர்கள் அனைவரும் mute-ல் இருப்பர். இது தேவையற்ற இடையூறுகள், இரைச்சல்களைத் தவிர்க்க.
  3. முதல் இரண்டு மணி நேரம் என் உரை முடிந்தவுடன், கேள்வி கேட்க விரும்புபவர்கள் Zoom chat box-ல் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். அவர்கள் வரிசையாக, ஒவ்வொருவராக unmute செய்யப்படுவார்கள்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai