பயண ஏற்பாடுகள்… (பயணக் குறிப்புகள் – 5)

தலைக்கு மேல் வேலை.  இப்போதுதான் வங்கிக்குப் போய் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி வந்தேன்.  பொலிவியாவில் On arrival வீசா என்பதால் அங்கே கேட்பார்கள்.  அதில் ஒரு ‘இக்கு’ இருக்கிறது.  ஜூன் மாதத்துக்கான ஸ்டேட்மெண்ட்டும் சேர்ந்தால் வீசா மறுக்கப்பட்டு விடலாம்.  பயணத்துக்கே ஏழெட்டு லகரத்தை செலவழித்து விட்டதால் அப்புறம் சேமிப்பில் என்ன இருக்கும்?  வெறும் பூஜ்யங்களைக் காண்பிக்க முடியாது.  அதனால் பயண முகவருக்கு ஏழெட்டு லகரங்களை அனுப்புவதற்கு முன்பாக நம்மிடம் இருந்த பேலன்ஸை வைத்து ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்.  … Read more

ரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…

நாளை நள்ளிரவு மூன்றரை மணிக்கு – சரியாகச் சொன்னால் நாளை மறுநாள் அதிகாலை – தோஹா விமானத்தைப் பிடிக்கிறேன்.  அங்கிருந்து சாவொ பாவ்லோ.  அங்கிருந்து லீமா.  மொத்தம் 36 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் போகும்.  பையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறேன்.  இந்த நிலையில் பின்வரும் கடிதம் ஃப்ரான்ஸிலிருந்து வந்தது.  அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வணக்கம் , பிரான்ஸில் இருந்து வெளியாகும் ……………… இணைய சிற்றிதழ் அதனது ஆவணி இதழை தமிழக சிறப்பிதழாக … Read more

தஞ்சை ப்ரகாஷ் (மீண்டும்)

போகிற போக்கில் ஒருவர் வந்து ப்ரகாஷுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எழுதினார் அல்லவா? ப்ரகாஷின் கதைகள் மறு பதிப்பில் வரும்போது கொடூரமான அச்சுப் பிழைகளோடு வருவதைக் கண்டு நான் மிகவும் துயரம் கொண்டிருக்கிறேன். மனிதர், உயிரோடு இருக்கும்போதும் எவனும் கண்டு கொள்ளவில்லை. இறந்த பிறகு இப்படி அவமானப்படுத்துகிறார்களே என்று. பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். அவற்றின் அர்த்தம் யாருக்குமே புரியாது. கயாமத் கதையில் ஒரு இடத்தில் அங்கே தாவூத் நடந்து கொண்டிருந்தது என்று வருகிறது. இதற்கு யார் விளக்கம் சொல்வது? … Read more

கலைஞனும் சமூகமும்… (2)

ஜெ. பிரச்சினை பற்றி பலரும் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.  யாருக்கும் பதில் சொல்லவில்லை.  காரணம், நான் எழுதியிருந்ததை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  அப்படிப்பட்டவர்களோடு என்னால் மல்லுக்கு நிற்க முடியாது.  பொதுவாக தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை மதிக்காத சமூகம்.  நடிகர்களாக இருந்தால் கோவில் கட்டிக் கும்பிடுவார்கள்.  காதையும் நாக்கையும் அறுத்துப் போடுவார்கள்.  எழுத்தாளர்களையும் அப்படி வழிபடுங்கள் என்று சொல்லவில்லை.  அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.  ஆசான்களை அவமதிக்கும் சமூகம் இது.  தி.ஜ.ர. ஒரு மகான்.  ஆனால் … Read more

தஞ்சை ப்ரகாஷ்

”நிறைய வார்த்தைகளை உச்சரிப்பு புரியாமல் கையாண்டிருக்கிறார் பிரகாஷ்.”இப்படி ஒரு நண்பர் என் முகநூல் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்த முதல் எழுத்தாளர் பிரபஞ்சன். அவர் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு பெரிய அகராதியே போடலாம். அதற்காக அவருக்காக நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது. ஒரு விஷயம் தெரிய வந்தால் அதன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும். தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை ஒருவன் தன் … Read more

கலைஞர்களும் சமூகமும்… (ஜெயமோகன் விவகாரம்)

ஜெயமோகன் பிரச்சினை பற்றி எல்லோரும் எழுதி விட்டார்கள்.  அது பற்றி நான் ஒரு தொலைக்காட்சி சேனலில் பேசினேன்.  பேசியதில் பத்தில் ஒரு பங்கு கூட வரவில்லை.  மேலும், கோவை கண்ணதாசன் விழாவிலும் அது பற்றிக் குறிப்பிட்டேன்.  ஆனாலும் விரிவாக எழுத நேரமில்லை.  பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருக்கிறேன்.  இரண்டு தினங்களுக்கு முன்பு கிங் இன்ஸ்டிட்யூட்டில் போட்டுக் கொண்ட தடுப்பு ஊசி சம்பவமே ஒரு கதைக்கான சரக்கைக் கொண்டது.  இத்தனை வேலைக்கிடையிலும் இந்தப் பிரச்சினை பற்றி எழுதி விடவே தோன்றுகிறது.  … Read more