நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்…

கார்ல் மார்க்ஸ் நூல் (ராக்கெட் தாதா) வெளியீட்டு விழாவின் போது எதார்த்த வாதத்தின் காலம் முடிந்து விட்டது; வேறு விதமான கதைகளை எழுதுவோம் என்று பேசினேன்.  அப்போது தமிழில் எழுதப்பட்டது எல்லாமே எதார்த்தவாதக் கதைகள்தாம் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டது.  ஆனால் எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், என்னுடைய ஸீரோ டிகிரி, நான் எழுதிய சிறுகதைகளான நேநோ, the joker was here, கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து … Read more

விழா : சிறுகதை

என்னுடைய வாசகர் வட்டத்தின் உள் அமைப்பில் உள்ளவர் அந்த நண்பர்.  பெயர் ராஜா என்று வைத்துக் கொள்வோம்.  ஜனவரி இறுதியில் போன் செய்தார்.  மார்ச்சில் எங்கள் நிறுவனத்தின் திறப்பு விழா உள்ளது;  நீங்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டார்.  ஏதோ ஒரு தேதி சொன்னார்.  21 என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  காலண்டரைப் பார்த்தேன்.  அந்தத் தேதியில் வேறு எதுவும் நிகழ்ச்சி இல்லை.  சரி, வருகிறேன்; ஆனால் ஒரு விஷயம் ராஜா என்றேன்.  என்ன சாரு?  எனக்குப் … Read more

அறம் தொலைத்த சமூகம் (2)

ரகு என் புத்தகங்களில் ஒன்றை மொழிபெயர்த்தவர்.  100 பக்க புத்தகம்.  இதற்கு சன்மானமாக ஒரு தொகை கொடுக்க வேண்டுமானால் 5000 ரூ. கொடுக்கலாம்.  ஒரு பக்கத்துக்கு 50 ரூ.  உண்மையில் ஒரு வார்த்தைக்கு 50 ரூ. கொடுப்பதுதான் நியாயம்.  ஆனால் 20 பிரதிகள் விற்கும் ஒரு சமூகத்தில் பக்கத்துக்கு அம்பது கொடுப்பதுதான் சாத்தியம்.  நண்பரிடம் பணம் வேண்டுமா என்று கேட்டபோது வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி புத்தகம் போடும் பதிப்பக நண்பருக்கு … Read more

அறம் தொலைத்த சமூகம் (1)

பொதுவாக நான் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் பேசுவதில்லை; பழகுவதும் இல்லை.  அந்த விதியை மீறினால் எனக்கும் பிரச்சினை; அவர்களுக்கும் பிரச்சினை.  என்ன பிரச்சினை?  ஒரு சில உதாரணங்களைச் சொல்கிறேன்.  20 ஆண்டுகளுக்கு முன்பு என் தங்கை கேட்டாள், ”ஏன்ணே இன்னும் வீடே வாங்கல?”  இந்தத் தங்கையையே நான் ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கிறேன்.  முதல் கேள்வியே இதுதான்.  கடைசிக் கேள்வியும் அதுதான்.  அதற்கு மேல் அவளை நான் சந்திக்கவே இல்லை.  இந்தக் கேள்வியில் என்ன தவறு என்று … Read more

நானே ராஜா! நானே மந்திரி!

நாட்டின் பல தொகுதிகளில் வாக்காளர்களில் பலர் வாக்கு அளிப்பதில்லை.  வாக்கு அளிக்காதவர்களின் சதவிகிதம் சில தொகுதிகளில் 40 சதவிகிதம் கூடப் போய் விடுகிறது.  மக்களின் இந்த விரக்திக்குக் காரணம், எந்தக் கட்சியுமே மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான். தில்லியில் ஆயிரக்கணக்கான சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் பிகாரிகள்.  பீகாரில் தங்கள் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு தனியாக தலைநகரில் ரிக்‌ஷா ஓட்டிப் பிழைக்கிறார்கள்.  பத்துக்குப் பத்து அறையில் மூன்று பேர் தங்குகிறார்கள்.  அறைக்கு … Read more

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் பெண்களை மையப்படுத்திய படம்.  ஆரண்ய காண்டத்தின் ஆரம்பக் காட்சிக்கும் சூப்பர் டீலக்ஸின் ஆரம்பக் காட்சிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. படுக்கையில் பெண்ணிடம் ஆண் தோல்வியுற்று அவளைச் சித்திரவதை செய்வது ஆரண்ய காண்டத்தில்.  சூப்பர் டீலக்ஸில் அதன் நாய (சமந்தா) தன் கணவன் (ஃபஹத் ஃபாஸில்) வெளியே சென்றிருக்கும் இரண்டு மணி நேரத்தில், தான் கல்லூரியில் காதலித்தவனை வீட்டுக்கு வரவழைத்து உறவு கொள்கிறாள்.  அந்த உறவில் அவன் தோல்வியுறுகிறான். என்னடா ஆச்சு என்கிறாள்.  டென்ஷன் என்கிறான்.  … Read more