பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் மூன்று ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய ஆவணம். இதன் கதாநாயகன், இந்த நாவலை எழுதிய சி.சு. செல்லப்பாதான். அத்தனை பாத்திரங்களும் நிஜம். கீழே வருவது ஜார்ஜ் ஜோசஃப் என்பவரைப் பற்றி: அது அவனுக்கு வெறும் சரித்திரப் புஸ்தகம் அல்ல. ஒரு மானிட ஜாதியின் வாழ்வு பற்றியது. அதன் உரிமை பற்றியது. ரோம் தேசத்து அடிமைகளைப் பற்றிப் படித்திருந்தான். ‘பென்ஹர்’ சினிமா பேசாத படம் சென்ற வாரம்தான் சிட்டி சினிமாவில் அவன் பார்த்தான். அடிமைகள் … Read more

கார்டியாலஜிஸ்டுகளுக்கு இனி வேலை இல்லை!

ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஆஞ்ஜைனா ஆஞ்ஜைனா என்று அனத்திக் கொண்டிருந்தேன் அல்லவா?  இப்போது ஜிம்முக்குப் போகும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்தது எப்படி?  கடந்த ஒரு மாதமாக ஆஞ்ஜைனா இல்லை.  இனியும் வராது. என் இதயத்தின் ரத்தக் குழாய்களில் 50 சதவிகத அடைப்பு இருந்தது.  அதனால் சுவாசிக்க ஆக்ஸிஜன் குறையும் போது நெஞ்சு வலி ஏற்படும்.  பத்தே பத்து அடி கூட நடக்க முடியாதபடி வலிக்கும்.  காலையில் வலிக்காது.  மாலையில் வலிக்கும்.  இதற்காக ஒரு கை மருந்து … Read more

நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்…

என்னைத் தெரியாதவர்கள், என்னை அறியாதவர்கள் என்னைத் திட்டினால் எனக்குக் கோபம் வருவதில்லை. உயர்ந்த இடத்தில் இருப்போர் அப்படித்தான் இருக்க வேண்டும். நன்னிலம் நடராசன், வண்ணை ஸ்டெல்லா, வெற்றி கொண்டான் போன்றவர்கள் எதிர்க் கட்சித் தலைவர்களை – குறிப்பாக ஜெயலலிதாவை – திட்டிப் பேசுவதைக் கேட்டு வளர்ந்தவன் நான். தீப்பொறி ஆறுமுகம் பேச்சை மட்டும் நேரில் கேட்டதில்லை. ஒரு பெண் அரசியல்வாதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டு, இடையிலேயே வேறோர் விஷயத்துக்குத் தாவி பேசி விட்டு வந்து, ஒரு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் – முன்பதிவுத் திட்டம்

நேற்றிலிருந்து ஸ்ரீராம் ஒரே குஷியாக இருக்கிறார். என்ன காரணம் என்றால், ’எங்கே உன் கடவுள்?’ என்று என்னுடைய கட்டுரைத் தொகுப்பு ஒன்று உள்ளது. சோ இருந்த போது துக்ளக் பத்திரிகையில் தொடராக வந்தது. கிழக்கு பதிப்பகம். அது கிண்டிலில் வந்துள்ளது. ஏதோ சலுகை விலைத் திட்டத்தில் இப்போது ஒன்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. அதன் கிண்டில் விற்பனை இப்போது ஏதோ இந்தியாவின் டாப் புத்தகங்களையெல்லாம், cult புத்தகங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு முதல் இடத்தில் இருக்கிறதாம். இதை நீங்கள் … Read more