நிரூபணம்

என் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்களுக்குத் தெரியும், நான் எழுத ஆரம்பித்த இருபத்தைந்தாம் வயதிலிருந்து ஐம்பதாவது வயது வரை என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பதிப்பகமும் என் நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட கொள்கை அடிப்படையில் வெளியிட மறுத்து விட்டார்கள். என்ன கொள்கை? அவர்களைப் பொருத்தவரை நான் எழுதுவது குப்பை. ஆனால் அப்படி மறுக்கும் அவர்களே நட்பு கருதி அதை அச்சடித்துக் கொடுத்து உதவினார்கள். … Read more

இன்றைய புத்தக விழா

இன்று மாலை ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு வருவேன். ஸீரோ டிகிரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள எலிப்பொந்தில் நாலரையிலிருந்து ஒன்பது மணி வரை இருப்பேன். இதற்குப் பிறகு நான் பதினைந்தாம் தேதியிலிருந்துதான் வருவேன். நாளை கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். எஸ்கிலோ பதிப்பக அரங்கில் என் தங்கை மகள் நிவேதிதாவின் இரண்டு ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே எஸ்கிலோ பதிப்பக வெளியீடுகள். நான் இன்னும் படிக்கவில்லை. எஸ்கிலோ அரங்கு எண் 492. அவளும் இப்படி எழுத்தாளராக ஆவாள் என்று தெரிந்திருந்தால் … Read more

SHAME!

பபாஸி பற்றி நான் தமிழக முதல்வருக்கு எழுதிய இரண்டு கடிதங்களையும் வாசகர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது மழை. ஸீரோ டிகிரி அரங்கிலும் யாவரும் அரங்கிலும் மற்றும் பல அரங்குகளிலும் மழையால் புத்தகங்கள் நனைந்து பல லட்சம் நஷ்டம். இத்தனைக்கும் பெரிய மழையெல்லாம் இல்லை. பபாஸியின் அஜாக்கிரதை மட்டுமே காரணம். இந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக நான் இந்த ஆண்டு எனக்கு வரக் கூடிய ராயல்டி பணத்தை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பின்வரும் பதிவு … Read more

சங்கமும் கவிதையின் உன்மத்தமும்

மேற்கண்ட தலைப்பில் பேசியதை கொஞ்ச நாளில் விரிவாக ஒரு கட்டுரையாக எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் கட்டுரையாக எழுதினால் எந்த விவாதமும் வராது. பேசினால் வரும். சமீபத்தில் நான் பேசிய இரண்டு உரைகள் பற்றி ஒரு கடிதம்: வணக்கம் சாருபுத்தகத் திருவிழாவில் நீங்கள் இன்று பேசிய உரையைக் கேட்டேன். இனிமேல், “எனக்கு மேடையில் பேச வராது” என்று எங்கும் கூறாதீர்கள். உங்களின் வேறு சில உரைகளையும் கேட்டுள்ளேன். அவற்றுள் இன்றைய பேச்சு ஆகச்சிறந்ததாக இருந்தது. இன்றைய பேச்சில் … Read more

புத்தக விழா குறிப்புகள் – 4

நேற்று (8.1.2024) விசேஷமான நாள். இரண்டு காரணங்கள். ஒன்று, மாலாடு கிடைத்தது. சாப்பிட்டு பல காலம் இருக்கும். இரண்டாவது, வெளியே பகிர முடியாது. டைட்டானிக் படத்தில் கப்பலின் விளிம்பில் நிற்பார்கள் இல்லையா இருவர்? அது போன்றதொரு அனுபவம். மற்றபடியும் விசேஷமான நாள்தான். ஸீரோ டிகிரி அரங்கில் இருந்த நேரம் பூராவும் கையெழுத்துப் போட்டபடியே இருந்தேன். பலரும் கட்டுக்கட்டாக என் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். பலரும் பெட்டியோவைத் … Read more

கேரள இலக்கிய விழா

ஜனவரி 11 முதல் 14 முடிய கோழிக்கோட்டில் நடக்க இருக்கும் கேரள இலக்கிய விழாவில் என்னுடைய செஷன் பற்றிய விவரம்: அமர்வு: ஒன்று காலை பத்து மணி Conversations with Aurangzeb Category: Conversation Speakers Charu Nivedita Shiyas Mohammed இரண்டாவது அமர்வு: காலை பதினோரு மணி. பங்கேற்பாளர்கள் சாரு நிவேதிதா ஜெயமோகன் வசுதேந்த்ரா ஜே. தேவிகா (ஒருங்கிணைப்பாளர்) பொருள்: Translating India: A South Indian Context