புறாவின் எச்சத்தில் ஆலம் விதை…

இன்று பூர்ணசந்திரன் பேசினார்.  ஒரு மாதமாக தொடர்பு இல்லை என்றதும் குழப்பமாக இருந்தது.  ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் அடுத்த நாளே என் மீது கொலை வெறியோடு திரிவதால் வந்தக் குழப்பம்.  சொன்னேன்.  சிரித்தார் பூர்ணா.  எவ்வளவு துரோகங்கள் நடந்தாலும் உள்வட்டம் உள்வட்டம்தான்.  உள் வட்டத்தில் இதுவரை குழப்பம் நடக்கவில்லை.  இனிமேலும் நடக்காது.  என் பொருட்டு எவ்வளவோ ஏச்சு பேச்சுகளை சகித்தவர் பூர்ணா.  தொடர்பு இல்லை என்றதும் தவறாக நினைத்தது என் தவறுதான்.  இனி இப்படி நடக்காது.  என்னால் … Read more

எக்ஸைல்-2 பற்றி : அராத்து

இன்று ஒரு சந்தேகம் கேட்பதற்காக அராத்துவுக்கு எக்ஸைல்-2 நாவலின் எட்டாவது அத்தியாயத்தை அனுப்பி வைத்தேன்.  மிக நீண்ட அத்தியாயம் அது.  மாலைதான் அழைப்பார் என்று பார்த்தால் கொஞ்ச நேரத்தில் அழைத்தார்.  படிச்சிட்டீங்களா என்றால் ஓ படிச்சுட்டனே என்கிறார்.  எப்படி என்று அவரே வாசகர் வட்டத்தில் எழுதியிருக்கிறார்.  பாருங்கள்: சாருவின் எக்ஸைல் 2 ஒரு அத்தியாயம் படித்தேன்.முழுக்க முழுக்க மரங்கள் மற்றும் பூக்களைப்பற்றி எழுதியிருக்கிறார்.க்ளாஸிக் என கண்ணை திறந்து கொண்டே சொல்லிவிடலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் , … Read more

நானும் என் வாழ்க்கையும்… (3)

சிறிது நேரம் முன் ஒரு நண்பரிடம் பேசினேன்.  என்னைக் கன்னாபின்னா என்று திட்டி எழுதுகிறார்களாம்.  என் நண்பர்களையும் கன்னா பின்னா என்று திட்டுகிறார்களாம்.  ”நானும் அதேபோல் களத்தில் இறங்கி அவர்களைத் திட்டப் போகிறேன்” என்றார் நண்பர்.  எப்படி எப்படித் திட்டுவேன் என்றும் சொன்னார்.  நான் மிரண்டு போனேன்.  எலியோடு சண்டைக்குப் போய் நீங்கள் வெற்றியே அடைந்தாலும் நீங்களும் எலியாக மாறி விட்டீர்கள் என்றுதானே பொருள்? உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் … Read more

நானும் என் வாழ்க்கையும்… (2)

நானும் என் வாழ்க்கையும் முதல் பகுதியைப் படித்து விட்டு என் நண்பர் ஒருவர் குதி குதி என்று குதித்தார். என்னுடைய உள் வட்டத்தைச் சேர்ந்த இருபது பேரில் ஒருவர் அவர்.  அவருக்கும் எனக்கும் அநேகமான எல்லா விஷயங்களிலும் ஒத்துப் போகும்.  அது என்னவோ இந்தப் பண விஷயத்தில் மட்டும் ஒத்துப் போகவில்லை.  அதாவது, வெறும் வாய்க்கு அவல் கொடுத்து விட்டேனாம்.  இதுதான் சாக்கு என்று என்னைப் பிரித்து மேய்ந்து விடுவார்களாம்.  அப்படி இப்படி, ஆ… ஊ… மயிரே … Read more

நானும் என் வாழ்க்கையும்…

(முன் குறிப்பு: இந்தக் கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் என் மீது அவதூறு செய்து என்னை வசை பாடும் அயோக்கியர்களையே குறிக்கிறேன் எனக் கொள்க.  என் நண்பர்களையோ, என் அன்புக்குரிய வாசகர்களையோ அல்ல) முதலில் கஜலட்சுமிக்கும், ஸ்ரீதருக்கும், தர்மசேனனுக்கும், சுப்ரமணியனுக்கும், காயத்ரிக்கும், ராமசுப்ரமணியனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த நன்றி என்ற வார்த்தையைக் கூட அவர்கள் விரும்ப மாட்டார்கள்.  தந்தையோ குருவோ நன்றி சொன்னால் அது சரியாக இருக்குமா என்பார்கள்.  இருந்தாலும் நன்றி … Read more

Digimodernism – First Footprint (4)

கடந்த ஆறு மாதங்களாக நான் எக்ஸைல் மற்றும் ஸீரோ டிகிரி மொழிபெயர்ப்பில் மூழ்கிக் கிடக்கிறேன்.  மொழிபெயர்ப்பாளர்களோடு நானும் co-translator ஆக செயல்பட்டு வருகிறேன்.  இந்த நிலையில் எக்ஸைலின் அடுத்த அத்தியாயத்தைச் செப்பனிட்டு ஒரு வாரத்துக்கு முன்னால் மொழிபெயர்ப்பாளருக்கு நான் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால் என் உயிர்ப் பிரச்சினையான அந்த மொழிபெயர்ப்பைக் கூட தள்ளி வைத்து விட்டு, ஒரு வாரம் ஓய்வெடுங்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி விட்டு இந்த முன்னுரை வேலையில் ஈடுபட்டேன்.  இது வெறும் எழுத்து வேலை … Read more