என்ன பெயர் வைக்கலாம்?

வணக்கம் சாரு. நான் வசிக்கும் பகுதிக்கு எழுத்தாளர்களின் பெயர்களை சூட்ட விருப்பம். தங்களின் ஆலோசனைகளையும் மற்றும் ஏதாவது மாற்றங்கள் இருப்பின் தயவுகூர்ந்து பகிரவும். நன்றி. பிரமிள்  ஞானக்கூத்தன்  ஔவை  சூடாமணி  பாரதி  நகுலன்  மௌனி  அசோகமித்திரன்  ஜெயகாந்தன்  கல்கி  சாண்டில்யன்  சார்வாகன்  ஆதவன்  சுஜாதா  வள்ளுவன்  கம்பன் அம்பை தி.ஜானகிராமன் மா. அரங்கநாதன் வல்லிக்கண்ணன்  தொ.மு.சி.ரகுநாதன் ராஜம் கிருஷ்ணன் கிருஷ்ணன் நம்பி ஜி.நாகராஜன் கந்தர்வன் கு.அழகிரிசாமி பிரபஞ்சன் புதுமைப்பித்தன் ஆதவன் நீல பத்மநாபன் அகிலன் காசியபன் சிட்டி … Read more

153. ஒரு ஜாலியான மேட்டர்…

படித்து செம ஜாலியாக ஆகி விட்டதால் இதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதுகிறேன்.  மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள டி. தர்மராஜ் என் மதிப்புக்கு உரியவர்.  தமிழ்நாட்டில் நான் மதிக்கும் ஒன்றிரண்டு புத்திஜீவிகளில் அவர் ஒருவர்.  அவரது சமீபத்திய மரண ஆசை என்ற கதை மாதிரியான கட்டுரை பிரமாதமாக இருந்தது.  அவர் இப்போது என்ன எழுதியிருக்கிறார் என்று பார்த்த போது யாரோ எழுதிய ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.  அது அவரது மரண ஆசை கதை … Read more

152. ஒரு ட்ரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளனாக வாழ்தல்…

பின்வரும் சம்பவத்தை ஏதோ ஒரு நாவலில் எழுதியிருக்கிறேன்.  இருந்தாலும் அதை இங்கே மீண்டும் இங்கே சொல்லத் தேவை ஏற்பட்டிருக்கிறது. ஒரு நெருங்கிய நண்பனின் அலுவலத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.  நண்பன் தான் அங்கே சீஃப்கீழே பணிபுரியும் ஊழியர்கள் கிளம்பி விட்டார்கள்.  மாலை ஆறு இருக்கும்.  நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் வந்தார்.  அம்பதாகக் கூட இருக்கலாம்.  என் வயது அப்போது நாற்பது.  அந்தப் பெரியவரை சமீபத்தில் பார்த்தபோது கூட … Read more

151. சில ஆன்மீகப் பயிற்சிகள்

நாஸ்திகனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய இரண்டு புத்தகங்களில் ஒன்று, Autobiography of a Yogi.  அதில் பரமஹம்ச யோகானந்தா அவருடைய குரு அவருக்கு அளித்த சில ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றிச் சொல்கிறார்.  அதில் இரண்டை உங்களுக்குச் சொல்லப் பிரியப்படுகிறேன்.  சம்பவம் நடப்பதெல்லாம் இமயம்.  ஆசிரமத்தின் ஒரு இடத்தில் யோகானந்தரை தான் சொல்லும் வரை அந்த இடத்திலேயே அசையாமல் நிற்கும்படி சொல்லி விட்டுப் போய் விடுகிறார் குரு. இவ்வளவு விவரமாக, தெளிவாகச் சொன்னாரா என்று எனக்கு ஞாபகம் … Read more