156. இனிய அனுபவம்

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.   பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக … Read more

155. நேசமித்ரன், ஒக்தாவியோ பாஸ், ரொனால்ட் சுகேனிக் மற்றும் சிலர்…

சில தினங்களுக்கு முன்பு ஒரு இளைஞர் எனக்கு ஒரு கடிதம் எழுதி தான் ஒரு நாவல் எழுதியிருப்பதாகவும் அதை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.  ஐயோ, அசோகாவை முடிக்கும் வரை (மார்ச்) என்னால் எந்தப் பக்கமும் திரும்பக் கூட முடியாதே என்றேன்.  நான் தான் அவரது ஆதர்சம் என்று அதற்கு முன்பே கூட சில கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் விடவில்லை.  நாவல் 150 பக்கம், வெறும் ஐந்து பக்கத்தைப் படித்தால் கூடப் போதும் என்றார்.  … Read more