இன்று க்ளப்ஹவுஸில் ஃபாத்திமா பாபு

இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு என்னுடைய ‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற சிறுகதையை க்ளப்ஹவுஸில் வாசிக்கிறார். நானும் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். லிங்க் கீழே. https://www.clubhouse.com/join/%E0%AE%9A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE/WanFmsBv/Md3woJd5

கருட கமனா ரிஷப வாஹனா இயக்குனரிடமிருந்து ஒரு கடிதம்

நேற்று இரவு (15.1.2022) பத்து மணிக்கு கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பற்றிய என் மதிப்புரையை எழுதி பதிவேற்றி விட்டுப் படுத்தேன். காலையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் பி. ஷெட்டியிடமிருந்து இப்படி ஒரு கடிதம். இதுவுமே கூட தமிழில் நிகழ்வது வெகு அரிது. கேரளத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதுவது வழக்கம். ஆனால் கர்னாடகாவில் எழுத்தாளர்கள்தான் சமூக வெளியில் உச்ச நிலையில் இருப்பவர்கள். சிவராம் காரந்த்துக்கும், யு.ஆர். அனந்தமூர்த்திக்கும், எஸ்.எல். பைரப்பாவுக்கும் கன்னடத்தில் … Read more