முயல்குட்டியின் முகம்

அவன் வயது எழுபத்து நான்குஅவள் வயது இருபத்து நான்குஎதுகை மோனைக்காகச்சொல்லவில்லைநிஜமே அப்படித்தான் இருவரும் வெளியே போனால்எதையும் யாரையும்கண்டுகொள்ளாத அந்தநகரில்‘இவர் யார், உன் தந்தையா?’என்று பலர்கேட்பதுண்டு அவள் தாய் வயதுநாற்பத்தெட்டுதாயின் தந்தைக்குஎழுபத்து நான்கு அதைச்சொன்னால்போடா பாஸ்டர்ட்உன் வயது இருபத்து நான்குஎன்பதுதான் என் நினைப்புஎன்பாள் அவனை அதுவரைஅப்படி யாரும்அழைத்ததில்லைஅடிக்கடி அவள்அப்படி அழைக்கவேண்டுமெனத்தோன்றும்தோன்றியதைச்சொன்னதில்லை அவளுக்குப் பணம்வேண்டும்பணத்துக்கொரு வேலைவேண்டும்வேலை தேடப் படிக்கவேண்டும்அதை முதலில்செய்யென்றான் கூடவேதன் நாவலையும்கொடுத்தான் படிப்பை விட்டுவிட்டுநாவலில் வேலைசெய்தாள்காலை நாலு மணிக்குத்தூங்கிஎட்டுக்கு எழுந்துகொள்வாள் நாவலை விட்டுவிட்டுப்படிப்பைப் பாரென்றான் என் உடல் பொருள் … Read more

வேட்கை

1 சாளரத்தின் வழியேதெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் செய்து முடிப்பதற்குஏராளம் வேலைகள் ஆனாலும் ஒருவன்எப்போதும் வேலையிலேயேஇருக்க முடியுமா என்ன? உயிர்மையிலிருந்து விஜயகுமார்ஒரு நேர்காணல் கேட்டார் புனைவிலும் புனைவல்லாதவற்றிலும்நாம் சொல்லாததைநேர்காணலில் சொல்லிவிடமுடியுமென நம்புகிறார்கள்உண்மையாகவும் இருக்கலாம் பாரிஸ் ரெவ்யூவில்செலினின் நேர்காணலைவாசித்துவிட்டு வாருங்கள்,சந்திக்கலாமென்றேன் உலக யுத்தத்தில்மண்டையில் அடிபட்டுஆயுள் முழுவதும்மனப்பிறழ்வு சுமந்துநரகத்தில் உழன்றவனையாபடித்துக்கொண்டிருந்தோம்? சொர்க்கத்தில் ரசம் இல்லைசொர்க்கத்தில் வாழ்க்கை இல்லைசொர்க்கத்தில் வலி இல்லைசொர்க்கத்தில் துரோகம் இல்லைசொர்க்கத்தில் காமம் இல்லைசொர்க்கத்தில் காதல் இல்லைசொர்க்கத்தில் கோபம் இல்லைசொர்க்கத்தில் தாபம் இல்லைசொர்க்கத்தில் குரோதம் இல்லைசொர்க்கத்தில் பழிக்குப் பழி இல்லைசொர்க்கத்தில் தந்திரம் … Read more

தோக்யோவில் வாங்கிய ஷூ

கோடைமழை பொய்த்து விட்டதுவந்தால் வரும்இல்லாவிட்டால் இல்லைகோடைமழை அப்படித்தான்கோடையோடு நுங்கும்பதநீரும் விதவிதமாய்மாம்பழமும் வந்தாயிற்றுஇளநீர் விற்கும் தள்ளுவண்டி முன்கூட்டம் அதிகம்மரஞ்செடிகொடிகள் கொஞ்சம்வாடித்தான் போயிருக்கின்றன தெருப்பிராணிகளும்பட்சிகளும் குடித்துதாகம் தீர்க்கவென்றுஅபிமானிகள் சிலர்தம் வீட்டு வாசலில்மண்சட்டியில் நீர் வைத்திருக்கிறார்கள் கையில் மொபைல்ஃபோன்காதுகளில் ஏர்பாட்சகிதமாக வழக்கம்போல்மோகினிக்குட்டியுடன் பேசியபடிநடக்கிறேன் ’கையிலுள்ள மொபைல்ஃபோன்கவனம்,இப்போதுதான் ஒரு திருடன்ஒரு நடைப்பயிற்சியாளரின்மொபைல்ஃபோனைப்பறித்துக்கொண்டு பைக்கில் பறந்தான்’என்றார் சாலையைப் பெருக்கிக்கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர் மொபைல்ஃபோனைபாக்கெட்டில் வைத்தேன்கழுத்திலிருந்த சங்கிலியைசட்டைக்குள் போட்டேன் இந்த காந்தி நகரில்மரங்கள் அதிகம்வெய்யில் தெரியவில்லை எதிரே வந்த ஒருவர்என்னைக் கண்டுஹலோ என்றார் நானும் ஹலோ … Read more

ஆதலினால்

யாவருக்கும்அறியப்படுத்துவதுயாதெனில்எனது எண்ணைஅவரவர் அலைபேசிகளில்முடக்கி விடுங்கள்அதுதான் நன்மை பயக்கும் இதுவரைஅதிகாலை ஐந்துக்கு எழுந்துயோகாவும் தியானமும்முடித்துவிட்டுஏழு மணிக்கு நடைப்பயிற்சிஎட்டரைக்கு வீடு திரும்பிபூனை வேலை சிற்றுண்டி வேலைஅதற்குமேல் எடுபிடி வேலைஅதற்குமேல் மதிய உணவுக்கான சமையல் வேலைமூன்றிலிருந்து பத்து வரைஎழுத்தும் வாசிப்பும் மறுநாளும் இப்படியேமறுநாளும் இப்படியேமறுநாளும் இப்படியேஒருநாளும் விலக்கல்ல இப்போது ஒரு மாதசிறை வாச விடுமுறைக் காலம்தொடங்கி விட்டது அதிகாலை அஞ்சு வரைநண்பர்களோடு இலக்கியவிவாதம்மதியம் இரண்டுக்குநித்திரையிலிருந்து எழுச்சிகொண்டு திருநாளைத்தொடங்கலாம்சோற்றுக்கு இருக்கிறதுSWIGGY மாற்றுக் கருத்து கொண்டநண்பர்காள்!நீவிர் நள்ளிரவுக்கு மேல்அழைத்தால்கருத்து முரண்பாடுகளைக்கத்திப் பேசிநாமொரு முடிவுக்கு வரமுடியாதென்கின்றமுடிவுக்கு … Read more

இருள் படிந்த இல்லம்

பக்கத்து வீட்டு பால்கனிக்கும்என் வீட்டு பால்கனிக்கும் இடையேபதினைந்தடி இருக்கும்இங்கே தும்மினால் அங்கேயும்அங்கே தும்மினால் இங்கேயும்கேட்கும்அந்தரங்கமேயில்லை,ஒரு படுதா போடலாமென்றஎன் யோசனை மனையாளால்நிராகரிக்கப்பட்டது.சூரிய ஒளியைப் படுதாமறைத்து விடுமாம். தலைவனுக்கு வயது 55தலைவிக்கு 50மகள் வயது 20எல்லாம் குத்துமதிப்புதான்இது தவிர தலைவனின் தாய் தந்தைஅவர்களின் வயதுநமக்குத் தேவையில்லை காலை ஐந்து மணிக்குபால்கனி சாளரங்கள் திறக்கப்படும்தலைவி யோகா செய்வாள்ஏதோ என் வீட்டுக்குள்ளேயே இருந்துசெய்வதுபோல் இருக்கும்(படுதா கூடாது, சூரிய ஒளியைமறைக்கும்) இப்படியேஎன் வீட்டுக் காரியங்கள்அங்கேயும்அந்த வீட்டுக் காரியங்கள்இங்கேயும்நடப்பதுபோல் தோற்றம்கொள்ளும் மாதமொருமுறை வேதமந்த்ரங்கள்ஒலிக்கும்போது அன்றுஅமாவாசையெனத் தெரிந்து … Read more

அமிர்தம் வேண்டி நின்றேன்…

வரம் கேள் என்றால்யாராவது கையில் இருப்பதையேதிரும்பவும் கேட்பார்களா? இருப்பதை இல்லாததாய்க்காண்பவனே கவிஅதுவும் தவிரநீகுரலாக ஒலிக்கிறாய்நினைவாக இருக்கிறாய்தூலமாக இல்லையே தியாகராஜன் தன் கடவுளைத்தூலமாகக் காணவேஉஞ்சவிருத்தி செய்துஉருகியுருகிப் பாடினான்என்பதைஉனக்குநான்நினைவூட்ட வேண்டுமா? க்ஷீரசாகர சாமி மோகினியாய்மாறி அமிர்தத்தைதேவருக்குஊட்டியதாய்க் கதை நீயெனக்கு அமிர்தம்தருவது எப்போது?