இளையராஜா – றியாஸ் குரானா

நேற்று இளையராஜாவின் காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்டு மனம் மிக நொந்தேன். ராஜாவின் பாடல்களிலேயே ஆக மட்டமான பாடல். அப்படிக் கூட சொல்ல முடியாது. அந்தப் பாடலை ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அத்தனை மட்டமான பாடல். இதை ஃபேஸ்புக்கில் எழுதியதும் எல்லோரும் என் மீது வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே வசை. தன் அசிங்கம் அவ்வளவையும் என் மீது கொட்டினார்கள். எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. எல்லோரும் எத்தனை அசிங்கத்தோடு திரிகிறார்கள் … Read more

அருணாசலத்துக்கு வாழ்த்து

அருணாசலம் பற்றி எழுதியிருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை நான் கண்டதில்லை. அவர் கோபப்பட்டு நானோ நண்பர்களோ பார்த்ததில்லை. அதிர்ந்து கூடப் பேச மாட்டார். புகைப்பழக்கம் கிடையாது. மதுவைத் தொட்டதே இல்லை. எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், தூய சைவம். மதுரையில் எப்படி இப்படி ஒரு அதிசயம் நிகழ முடியும் என்றே எனக்குப் புரியவில்லை. தஞ்சாவூர் என்றால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மதுரையிலா? ஆனால் நேரில் பார்ப்பதற்கு … Read more

அன்பு – ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு – ஓர் அனுபவப் பகிர்வு – புவனேஸ்வரி

Charu, first I want to tell you how thankful and priviledged I feel, to recieve the அன்பு novel as my B’day Gift from you. It is one of the most blessed days of my life. Second, I want to sincerely apologise for such a delayed reply after reading the novel. நானூறு பக்க நாவல் எழுதின உங்க … Read more

ஹைதராபாத் சந்திப்பு

இந்த வாரம் வியாழக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு இரவு வரை (16இலிருந்து 19 வரை) ஹைதராபாதில் இருப்பேன், நண்பர்கள் யாரேனும் சந்திக்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தேன். (charu.nivedita.india@gmail.com) ஒரு நண்பர் ஃபேஸ்புக் காமெண்ட்டில் விருப்பம் தெரிவித்திருந்தார். மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் சிலாக்கியமாக இருந்திருக்கும். நான் ஃபேஸ்புக் காமெண்ட்ஸ் எல்லாம் பார்ப்பதில்லை. எதேச்சையாகப் பார்த்தேன். இன்னொரு நண்பர் இன்பராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் இதற்கு முன் ஏதேனும் கடிதம் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். ஃபெப்ருவரி … Read more

NFT – அராத்து – டிஜிடல் புரட்சி

அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது.  அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில்.  அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.  அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன.  இதுவரை பத்து பிரதிகள்.  ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது.  நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு … Read more

சாருவிடம் இருந்து மற்றும் ஓர் அற்புதம்: நரேஷ் கரினினா

“ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” சமகால எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் அன்பை பிழிந்து சாறு எடுத்துக்கொடுத்து கொண்டிருக்கும் தருணத்தில் அன்பைமறுசீராய்வுக்கு உட்படுத்திய “ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” நாவல் தமிழ் எழுத்துலகில் முக்கியத் தடம் என்பேன். இது போன்ற ஒரு படைப்பை இனி யாராலும் தரமுடியாது. சாருவின் பள்ளியிலிருந்து வருபவர்கள் கூட தொடத் தயங்கும் களம். சில எழுத்தாளர்கள் அன்பை உயிர் உள்ள ஜீவன்களில் கொட்டித்தீர்த்து விட்டு இப்பொழுது சடப்பொருட்கள், நகரங்கள் மீதெல்லாம் காட்டத் தொடங்கி விட்டார்கள். … Read more