வினித்துக்குப் பிறந்த நாள்

குடிக்க மாட்டான், ஆனாலும் ஆறேழு லார்ஜ் போட்ட மாதிரியே கண்கள். எல்லாம் சிந்தனையும் தத்துவமும் தந்த போதை. புகைக்கவும் மாட்டான். பெண்கள்? மூச். ஹலோ சொல்லும் பெண்களிடமும் மிலோராத் பாவிச் தெரியுமா ப. சிங்காரம் தெரியுமா என்று பயமுறுத்தி விரட்டி விடுவான். மூன்று மாதம் பழகிய பெண், உன்னை நெனச்சா பயமா இருக்குடா என்று பிரேக் அப் பண்ணி விட்டது. எங்கள் ஊர்க்காரன். இந்தக் காலத்து இளைஞனிடம் காணும் எந்த அடையாளமும் இல்லாதவன். என் காலத்துக்குப் பிறகு … Read more

ஸ்மாஷன் தாரா: முன் வெளியீட்டுத் திட்டம்

ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புகை நடனமாக மேக உருவுகளின் ஓயாத சலன இசையாக வெளிப்படுகின்றன. காலம் ஒரு நீர்க்கடிகாரமாய் மழையாகவும் ஆவியாகவும் வானத்திற்கும் பூமிக்குமாக பொழிவதும் பறப்பதுமாக சாருவின் கவிதைகளில் இயங்குகிறது. இது வாழ்வின் … Read more

பெயர்க் குழப்பம்: குழந்தைகள்: நூலகங்கள்

சீனி என்னை அழைத்து ஔரங்ஸேப் விழா பற்றி எழுதியதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய முடியுமா என்று சிவபாலன் கேட்கிறார் என்றார். சிவபாலனா, ”திருப்பூர்க்காரர்தானே? ஒரு லட்சம் கொடுத்தாரே?” என்றேன். அதில்தான் பிரச்சினையே… என்ன பிரச்சினை? அவர் திருப்பூர் இல்லை, பொள்ளாச்சி. ஓ, மாற்றி விடுகிறேன். அது மட்டுமல்ல. பின்னே? அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பெயரும் தப்பாக உள்ளது, ஊரும் தப்பாக உள்ளது. … Read more

சிறார்களுக்கான நூலகம்

என் வாசகியும் தோழியுமான ப்ரியாவும் அவர் கணவர் செல்வராஜும் சேர்ந்து வளவன்கோட்டை (திருநெல்வேலி) கிராமத்தில் 20.3.2022 அன்று குழந்தைகளுக்கான (5 வயதிலிருந்து 15 வயது வரை) ஒரு நூலகத்தைத் தொடங்கியுள்ளனர். இப்போதைக்கு 300 புத்தகங்கள் உள்ளன. மாதந்தோறும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறையும் நடக்க உள்ளது. இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். திராவிடக் கட்சிகள் இலக்கியத்துக்காக என்ன செய்ததோ செய்யவில்லையோ, நான் உருவானதே நூலகங்களால்தான். ஆரம்பத்தில் படிப்பகங்களாக இருந்தன. எம்ஜியார் படிப்பகம்தான் முதல். தரையில் பாய் … Read more

ஔரங்ஸேப் 100 விழா (1)

ஔரங்ஸேப் – 100 விழா சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.  விழாவின் விசேஷம் என்று ஏராளமாக உண்டு.  வெள்ளிக்கிழமை காலை (18 மார்ச்) என் அறைக்கு வந்தார் நண்பரும் வாசகருமான சிவபால கணேசன்.  பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்.  நகை வைக்கும் சிறிய அலங்காரப் பெட்டி ஒன்றைக் கொடுத்து ஒரு சிறிய பரிசு என்றார்.  அதை வாங்கி ஒரு பக்கம் வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.  பெட்டியைத் திறந்து பாருங்கள் என்றார்.  திறந்து பார்த்தால் ஒரு தங்க செய்னும் … Read more

சாருவின் புத்தம் புதிய கவிதை
கனாவிலொரு பூனை
ஆத்மார்த்தியின் குரலில்…

கனாவிலொரு பூனை ஸ்னேகிதீ… உன்னைப் போலத்தான் நானும் மனிதர்களைக் காட்டிலும் பூனைகளையே அதிகம் நேசிக்கிறேன் ஆனால் பூனைகள் வேற்றுக்கிரக ஜீவிகளைப் போல் சிந்திக்கின்றன நடந்து கொள்கின்றன திடீர் திடீரென காணாமல் போய் திடீர் திடீரெனத் தோன்றும் புதிர்த்தன்மை கொண்டவையாக இருக்கின்றன பூனைகளின் மனதில் என்ன இருக்கிறதென்று பூனைகளின் கடவுளுக்கே தெரியாது பூனைகளுக்கே தெரியுமா என்பதும் ஐயம்தான் சமயங்களில் மனம் மிக நொந்து பூனைகளே வேண்டாமென்று வாழ்ந்திருக்கிறேன் சிருஷ்டியின் வினோதம் பூனையின்றி வாழ்க்கையில்லை என்கிறது போ போ மீண்டும் … Read more