சீலே – 1
ஒருவேளை நான் சீலே போகாமலேயே இறந்து போக நேர்ந்தால் ஆவியாக வந்து உன்னை பயமுறுத்துவேன் என்று அவந்திகாவிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. காரணம், இருபது ஆண்டுகளாக நான் சீலே செல்லத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். இருபது ஆண்டுகளாகத் தள்ளிப் போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக முயன்றேன். முடியவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல சீலே பயணத்துக்கு என் உடல்நிலை வேறு தன் தகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. இப்போது என்னால் மலையேறுவது கடினம். … Read more