சண்டியரும் வள்ளலாரும்…

http://www.jeyamohan.in/98542#.WR6a1X00jIU ஆசானிடமிருந்து பாராட்டைப் பெற்றதற்காக பிரபு காளிதாஸுக்கு வாழ்த்துக்கள்.  மற்றபடி, மேற்கண்ட குறிப்பில் ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது.  முகநூல் சண்டியர்.  இது பற்றி நானே பலமுறை பிரபு காளிதாஸிடம் பேசியிருக்கிறேன்.  என்ன பேசினேன் என்பதன் சுருக்கம்தான் இது.  பொதுவாகவே எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும் ஒரு வாசகருக்கு அந்த எழுத்தாளர் பற்றி ஒரு பீதியே ஏற்படுகிறது.  அந்த பீதியை ஏற்படுத்தாதவர்கள் என க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ். ராமகிருஷ்ணன் என ஒருசிலரையே குறிப்பிடலாம்.  ஜெயமோகன், சாரு … Read more

இரண்டு பரமாத்மாக்கள்

நேற்று நடந்த என் மகன் கார்த்திக்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பற்றி ஒரு இதழில் விரிவாக எழுத இருப்பதால் இப்போது இங்கே எழுதவில்லை.  மற்றபடி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.  உங்கள் அன்புக்கு பதிலாக என்னால் செய்யக் கூடியது இன்னும் அதிகமாகவும் இன்னும் சிறப்பாகவும் எழுதுவதுதான்.  அதைச் செய்வேன். இங்கே நேற்று நடந்த ஒரு வேடிக்கைச் சம்பவம் பற்றி.  டாக்டர் ஸ்ரீராம் எனக்கு செய்து வரும் உதவிகள் பற்றி, பணிகள் பற்றி நான் அவ்வப்போது எழுதி … Read more