சாருவுடன் சில தினங்கள்…

வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் சந்திக்கக் கூடாது என்ற  கருத்தை சுஜாதா ஒரு தடவை சொல்லப் போக, தமிழ்நாட்டின் வாசிப்புத் தளத்தில் சுஜாதா அப்போது பெரும் சக்தியாக விளங்கியதால் அவர் சொன்னது அனைத்து வாசகரிடத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அது ஒரு தவறான கருத்து.  காரணம்? சாக்ரடீஸிலிருந்து இன்றைய எழுத்தாளர் வரை அவர்கள் எழுதியவற்றை விட பேச்சின் மூலமும் உரையாடலின் மூலமும்தான் அதிகமான சிந்தனை மாற்றங்களை வாசகரிடத்தில் ஏற்படுத்துகிறார்கள்.  என்னை எடுத்துக்கொண்டால், நான் எழுதியது வெறும் பத்தே … Read more

மழை இப்போதும் வலுத்திருக்கிறது…

1 இந்த நேரம் பார்த்துநான் பார்த்துப் பழகியவொருதெருநாய் அனாதையாய்செத்துப் போயிற்றுசெத்துப் போவது இயல்புதான்மரணமொன்றும் புதிதல்லஅந்த நாயும் வயதானதுதான்சமீபத்திலேதான் அதற்கு நான்உணவிட ஆரம்பித்தேன்அப்படியாகத்தான் அந்த உறவுஆரம்பித்தது நேற்று மாலை காய்கறி வாங்கவெளியே சென்ற போதுஅந்த நாய் சாலையோரத்தில்உயிருக்கு இழுத்தபடிகிடந்ததைக் கண்டு அதனருகேஓடினேன்ஒருதுளி தண்ணீர் வேண்டும்இறுதித்துளி அந்தத் தெருவில் ஒரேயொருசெல்ஃபோன் கடை மட்டுமேஇருந்ததுஓடிப் போய் கொஞ்சம் தண்ணீர்கேட்டேன்அதிர்ச்சியாகப் பார்த்தான் அந்தவடகிழக்குப் பிராந்திய மனிதன்அவனோடு ஓட்டை இந்தியில்மல்லுக்கு நிற்க நேரமில்லை ஓட்டமாய் ஓடிவீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலைஎடுத்து வந்தேன் அதற்குள் நாயின் உயிர்பிரிந்திருந்தது … Read more

நகரசபை ஊழியர்கள் இன்னும் வரவில்லை

உன் இயக்கம் நின்று விட்டதுஉயிரற்ற உடல்சந்தடி மிகுதியில்கேட்பாரற்றுக் கிடக்கிறதுசொறியும் சிரங்குமாய் சீழ்வடியும் புண்களில் ஈக்கள்மொய்க்கின்றன பல தினங்களாக உன்னைநான் கவனித்து வருகிறேன் மரணம் உன்னை நெருங்குவதைஎன்னைப் போலவே நீயும்அறிந்து கொண்டு விட்டாயென்றேநினைக்கிறேன் எதிர்பார்த்த மரணமென்றாலும்மனம் ரணமாகி விட்டது மரணத்தை விடஉயிரற்ற உன் உடல்என்னைக் குதறுகிறது இத்தனைக் காலமோர்அற்புதத்தைத்தாங்கிய உடலுக்குகுறைந்த பட்ச மரியாதையுடன்விடைகொடுக்க வேண்டாமா? நகரசபையைத்தொலைபேசியில் அழைத்துசெய்தியைச் சொன்னேன்முகவரி கேட்டுக்கொண்டு“வருகிறோம்” என்றனர் ஒருமணி நேரம் நின்றேன்மரணத்தைவிட உயிரற்ற உடலின்அனாதிஎன்னை வதைக்கிறதுநடந்தபடியும்,வாகனங்களிலும்மனிதக் கூட்டம்போனபடியும் வந்தபடியும்இருக்கின்றது. ஒருவருமேஉன்னைலட்சியம் செய்யாததுசக உயிராகஎன்னைக் கொல்லுகிறதுஇப்படி … Read more

தியாகராஜா, எப்போது?

பலரும் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். நேற்று அவந்திகா சற்று சலிப்புடனே கேட்டாள். ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கும்போது அது பற்றிய எந்தச் செய்தியையும் வெளியே விடக் கூடாது என்பது விதி. ஆனால் நான் எப்போதுமே விதிகளை மீறுபவன். அதனால் இப்போதும் மீறுகிறேன். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக எனக்கு ஒரு பதில் தேவைப்பட்டது. நாவலில் Father Étienne Laurent Dupré என்று ஒருவர் வருகிறார். அவர் தியாகராஜரை கிறித்தவத்துக்கு மாறும்படி அழைக்கிறார். அதன் பொருட்டு ஒரு நீண்ட … Read more

சித்த மருத்துவர் பாஸ்கரன்

சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றிப் பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் உடல் மற்றும் மன நோய் மிக அதிக அளவில் பரவியிருக்கிறது. இந்த இரண்டு நோய்மைகளுக்குமே நீங்கள் பாஸ்கரனை பயன்படுத்திக் கொள்ளலாம். சித்தம் என்றாலே மனம்தான். எனவே உடல் மனம் இரண்டுக்குமே சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. மற்ற மருத்துவ முறைகளில் பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்தும் குணமாகாத பல நோய்கள் பாஸ்கரனின் மருந்துகளில் குணமாவதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். என் வாசகர்கள் பலர் பயன்பெற்றிருக்கிறார்கள். இப்போது … Read more

ஒதுங்கியிருக்கிறேன்…

சில தினங்களுக்கு முன்பு ஒரு வாசகரிடமிருந்து வாட்ஸப் மெஸேஜ் வந்தது. “இரண்டொரு நாளில் புனேவிலிருந்து சென்னை வருகிறேன். நானும் என்மனைவியும் என் இரண்டு மகள்களும் (மூத்தவளுக்கு ஆறு வயது, அடுத்தவளுக்கு மூன்று வயது) தங்களை வந்து சந்திக்க விரும்புகிறோம். நேரம் கிடைக்குமா?” “அப்போது நீங்கள் பிஸியாக இருந்தால் மீண்டும் 26ஆம் தேதி சென்னை வருகிறேன். மே 2 வரை இருப்பேன். அந்த நாட்களில் ஒருநாள் தங்களை வீட்டில் வந்து சந்திக்க முடியுமா?” அடிப்படையில் நான் ஒரு முட்டாள். … Read more

இரண்டு புதிய புத்தகங்கள்

2025ஆ,ம் ஆண்டு என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  இனி எழுத இருக்கும் நாவல்களையும், இப்போது எழுதிக்க்கொண்டிருக்கும் நாவல்களையும் இனிமேல் ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன்.  தமிழில் எழுதி நானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது அல்ல.  ஆங்கிலத்திலேயே எழுதி விடுவது.  காரணம் என்ன? பல வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களின் எழுத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.  சவூதி அரேபியாவில் அப்துர்ரஹ்மான் முனீஃபின் நாவல்கள் தடைசெய்யப்பட்டன.  அவர் சவூதியிலிருந்து வெளியேறி ஜோர்டானில் வாழ்ந்தார்.  டால்ஸ்டாய் போன்ற … Read more