சுஜாதையின் கரங்கள்

நதியாய் ஓடும் கண்ணீரில்உலகம் மூழ்கஅரச குமாரன்துயரின் நிழலைத் தொட்டான்.மனைவியின் மென்மைசிசுவின் புன்னகைகாற்றில் கரைந்தன.குதிரையின் உயிர்பாதையில் உறைந்தது. ஞானம் ஒரு தீப்பொறிபிரேதங்களின் மீது நடந்துஎங்கெங்கோ அலைந்துதவத்தின் எலும்புகளை அணிந்துஒளியின் மொழியைத் தேடினான்.வழி மறைந்திருந்தது. நாற்பத்தெட்டு நாட்கள்அன்ன ஆகாரமின்றிஎலும்பும் தோலுமாய்மரத்தடியில் நிலைத்தான்நதியின் மௌனம் தவழ்ந்ததுசுஜாதையின் கரங்கள்தங்கத்தில் பால் அன்னம் தந்தன.உயிர் மீண்டதுஞானம் இன்னும் மறைந்திருந்தது. உயிர் மீண்ட தருணத்தில்அவன் கண்டான்:உடல் துயரின் பாதையல்ல.நிழலும் ஒளியும் ஒன்றே,மரமும் மனமும் ஒன்றே.ஞானம் மௌனத்தின் மொழியென்ற ஞானம்அவனுள்ளே பிறந்தது.

கடவுளின் கனா

உலகம் அழியப் போகிறதுதேதி குறித்தான் ஒருவன்கொரோனாவை முன்னறிவித்தவன்என்றபடியால் அவன் வார்த்தைகள்மதிக்கப்பட்டன ஒரு மாதம் இருக்கிறதுஊடகங்கள் கூச்சலிட்டனபங்குச் சந்தை புழுதியில் உருண்டதுநிலங்களும் வீடுகளும் மதிப்பிழந்தனசிலர் பணத்தைப் புதைத்தனர்வந்தால் லாபம்,இல்லையெனில் நஷ்டமில்லைஅப்படித்தான் அவர்கள் கணக்குஆனால் அது மணல் மேட்டில் எழுதப்பட்டது விஞ்ஞானிகள் மறுத்தார்கள்அழிவு இல்லை என்றார்கள்நான் ஒரு காலத்தில் அவர்களைகடவுளராய் மதித்தேன்கொரோனா அந்த நம்பிக்கையைமண்ணில் தூசாக்கியது எனக்கு ஒரு கவலைஷேக்ஸ்பியரின் சொற்களும்பீத்தோவனின் இசையும்ஒரு புழுதிப் புயலில்அர்த்தமின்றிக் கரையலாமா? எப்படி அழியும் இந்த உலகம்?கடவுளின் ஆயிரம் கோடி நாமங்கள்கதையில் வருவது போலவா?அல்லதுபாவங்களுக்கானஇறைவனின் … Read more

நான் கொல்லுதல்

நிலவு ஒரு மௌனக் கண்ணாடி,நட்சத்திரங்கள் மறந்து போன கடவுச்சொற்கள்என்னைப் பார்க்க மறுக்கின்றன.குழந்தைப் பருவத்தில்பெரியோரின் முகம் பார்க்கஅண்ணாந்தவன்வானத்தைப்பார்க்க வாய்த்தவன்அதே வானம்தான்என் மீது புழுதியைக் கொட்டுகிறது. சத்தியம் ஒரு தொலைந்த நதிஅறம் வதந்திகளின் எதிரொலி பிறரின் கண்ணீரை வண்ணமாக்கிகதைகளை வரைகின்றேன்ஜீவன்களின் தோழனெனமுகமூடி அணிகின்றேன்.கேள்விகளுக்கு பதிலில்லைஆனாலும்ஒரு மூட்டை பதில்களுடன்ஆங்காங்கே அலைகின்றேன்அஞ்ஞானியாய் இருந்துகொண்டுஞானத் தோரணையில் திரிகின்றேன் கொசு, கம்பளிப்பூச்சி, கரப்பான் பூச்சி, அட்டை,மரவட்டை, எறும்பு, பூரான், பாம்பு, கோழி, ஆடு, ஈசல், கொக்கு, மடையான், தவளை, உடும்பு, மண்புழு,வண்ணத்துப்பூச்சியென்று நான் கொன்ற ஜீவன்கள்ஏராளம். நான் ஒரு பயணி,கரங்களில் மரணத்தின் முத்திரைபெண்களின் கண்ணீர்மனதின் கறைகளாகத்திரள்கிகின்றனஅன்பை உறுதியளித்து,துரோகத்தை மட்டுமே தருகிறேன். கருணை ஒரு மறந்த மொழிநேசம் ஒரு உடைந்த பாலம் அன்புக்குத் துரோகம்பரிவுக்கு வன்மம்கருணைக்குக் குரோதம்கனிவுக்கு மூர்க்கம்அருளுக்கு ஆணவம்நேசத்துக்கு முரட்டுத்தனம்தயவுக்குத் திமிர்என் வாழ்க்கை இதுதான் மனையாளிடம்நான் உச்சரிப்பது பொய்யின் மூச்சு மட்டுமே. ஒரு பெண்ணுக்கு சுகம் தருவதாய் வாக்களித்துஉடலின் தோல்வியில் மூழ்கியிருந்திருக்கிறேன் வழிபாட்டுத் தலங்களில்மனம் ஆடைகளை உரிக்கிறது குடியில் மூழ்கி,கீறல் விழுந்த இசைத்தகடாய்ஒரே புலம்பலைஒன்பது முறை எதிரொலிக்கிறேன். மனிதவுருக் கொண்டுவாழ்ந்தாலும்நானென்பவன்ஒரு நிழல்ஒரு கவிஞன்மேலும்கைவிடப் பட்டசொற்களின் குவியல்.

தக் லைஃப் – விமர்சனம்

ஒண்ணும் ரெண்டும் ஏழு, ஏழும் ஒன்பதும் இருபத்தைந்து, இருபத்தைந்தும் முப்பதும் தொண்ணூறு என்று ஒருத்தர் கணக்குப் போட்டு நம்மிடம் சொல்லி, கணிதத்தை வேறு திசையில் செலுத்தியிருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது தக் லைஃப் படம். மணி ரத்னத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எதார்த்த உலகம் பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது.  படத்தில் எல்லா காட்சிகளும், எல்லா பாத்திரப் படைப்புகளும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன.  சில உதாரணங்களைத் தருகிறேன். அமரனை (சிம்பு) சக்திவேல் நாயக்கர் (கமல்) சிறுவயதிலிருந்தே (ஏழு … Read more

ஓர் அற்புத உலகம்

(முன் குறிப்பு: இந்தக் கவிதையை நான் ஆறு மணி நேரத்துக்கு மேல் எழுதினேன். பத்துப் பதினைந்து படிகள் எடுத்தேன். திரும்பத் திரும்ப திருத்தினேன். திரும்பத் திரும்ப மாற்றினேன். மாற்றிய ஒவ்வொரு படியும் என்னிடம் உள்ளன. படித்துப் பாருங்கள்…) 1 அவன் கடவுளின் உலகைப் பார்த்தான்முகம் சுளித்தான் இங்கே எல்லாம் கலைந்து கிடக்கிறதுகாற்று குழப்பத்தை முணுமுணுக்கிறதுமுகங்களில் துக்கத்தின் தடயம்தெருவில் நடந்தால்பெண்களை உரித்துத் தின்கின்றன கண்கள்இரவின் நிழல்கள்குழந்தையின் முகத்திலும்தீயின் கறை படியச் செய்கின்றன மாற்றான் கழுத்தில் கத்தி வைப்பவன்மக்களின் தலைவன்அடுத்தவன் … Read more

பெட்டியோ – ஆங்கிலத்தில்

பெட்டியோ மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது. அடுத்த மாதம் பதிப்பகத்திடம் கொடுத்து விடுவோம். இந்த ஆண்டு இறுதிக்குள் ஆங்கில மொழிபெயர்ப்பு Petiyo என்ற தலைப்பிலேயே கிடைக்கும். இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கு செலவு இரண்டரை லட்சம் ரூபாய். ஐம்பதாயிரம் கொடுத்து விட்டேன். இன்னும் இரண்டு லட்சம் இந்த மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அடுத்த மாதமே மொழிபெயர்ப்பாளர் அன்பு நாவலை மொழிபெயர்ப்புக்கு எடுக்கிறார். இந்த இரண்டு லட்சம் ரூபாயை எப்படிக் கொடுப்பது என்று தெரியவில்லை. காரணம், என்னிடம் பணம் … Read more