புருஷன் -1 நாவல் மதிப்புரை: நிர்மல்

இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுவதே இதற்கு செய்யும் துரோகம்தான். ஏனென்றால் விமர்சனம் என்பது வாசித்த படைப்பைப் பற்றிக் கருத்து சொல்வதுதானே? இப்படி கருத்து சொல்வதையும், கருத்து சொல்கிறவரின் நோக்கத்தையும், கருத்தைக் கட்டமைக்கும் மொழியின் ஆற்றல்களையும், அதைப் பயன்படுத்துகிறவரின் மொழிப் புலமையையும் புலமையின்மையையும் சந்தேகிக்க வைப்பது இந்த நாவலில் இழையோடும் உணர்வாக நான் கருதுவதால், விமர்சனத்தை அபத்தமாகவே இந்த நாவல் கருதும். கருதினால் கருதிவிட்டுப் போகட்டும், வேறு வழியில்லை. ஆகையால் விமர்சனம் என்கிற பெயரில் எழுதியதே கீழ்க்காணும் கட்டுரை!    … Read more

கவிதை தெரியாத மட்டி மடையர்களுக்கு ஒரு விளக்கம்

இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பார்கள். இதை ஆண்டாளிடமும் மற்ற பக்தி இலக்கியக் கவிகளிடமும் காணலாம். திருப்பாவையில் கிருஷ்ணனின் லீலைகள், கோவர்த்தன கிரி, கம்ஸ வதம் போன்ற புராணக் கதைகள் எல்லாம் பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை. அதை விட முக்கியமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்படும் பக்தி மரபையும் ஆண்டாள் பின்பற்றுகிறாள். திருமால் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்ற ஆழ்வார்களைப் போலவே, தமிழ் பக்தி இலக்கியத்தின் பொதுவான உருவகங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறாள். அதேபோல் ஆண்டாளின் பாசுரங்களில் … Read more

இலவசம்

என் தாய்வழித் தாத்தாவின் பெயர் ராமசாமி. ராமசாமியின் பாட்டனார் செட்டிநாடு பகுதியிலிருந்து பர்மாவுக்குப் பெட்டியடியாகப் போய் பெரும் பணம் சம்பாதித்து வட்டிக்கு விட்டு செல்வந்தரானார். பெட்டியடி என்றால் என்ன என்று புயலிலே ஒரு தோணியில் வரும். எல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகம். ராமசாமி இந்தியாவையே பார்த்ததில்லை. ரங்கூனிலேயே இன்னொரு பணக்காரக் குடும்பத்தில் ராமசாமிக்குப் பெண் பார்த்துக் கட்டினார்கள். இரண்டாம் உலக யுத்தம் வந்த போது ராமசாமி தன் பணத்தையெல்லாம் தங்கமாக மாற்றிக்கொண்டு தன் மனைவி பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு … Read more

ஒரு குறுங்காவியம்

குமுதம் ஆசிரியராக இருந்து இளம் வயதில் இறந்து போன ப்ரியா கல்யாண ராமன் என் நெருங்கிய நண்பர். என் மேல் அன்பைப் பொழிந்தவர். இப்படி என் மேல் அன்பைப் பொழிந்த இன்னும் இரண்டு பேர் சார்வாகன், வாலி. என்ன துரதிர்ஷ்டம் என்றால் இந்த மூன்று பேருமே வெகு சீக்கிரத்தில் என்னை விட்டுப் பிரிந்து போனார்கள். அதில் ப்ரியா கல்யாண ராமனின் பிரிவு சற்றும் எதிர்பாராதது. சார்வாகன் சொல்லி விட்டார், அடுத்த தீபாவளிக்கு நான் இருக்க மாட்டேன் என்று. … Read more

எரியும் உண்மை

பயணிகளின் கூட்டமற்றஒரு பருவம்வங்காள விரிகுடாவின்ரௌத்திரத்துக்கு மாறாகஆரவாரமற்ற அமைதியானஅரபிக்கடல் கோவாவின் அஞ்ஜுனா கடற்கரையில்நண்பர்கள் வட்டமாகமணலில் அமர்ந்திருக்கிறோம்கைகளில் மதுக்கோப்பைமணல் குறுகுறுப்பாக உரசஅது ஒரு வித்தியாசமான அனுபவம் ஆளாளுக்கு எது பிடிக்குமென்றுசொல்ல வேண்டுமென்றான் ஒருவன். இசை என்றார் ஒருவர்,பெண்கள் என்றார் மற்றொருவர்பயணம்வாசிப்புஅதற்கு மேல் ஏதுமில்லைஅற்புதங்கள் அருகிப்போனமனித வாழ்வு. சுற்று என் பக்கம் வந்தபோது,மது என்றேன்அது நாக்கில் கசந்துதொண்டையை எரிக்கையில்,ஆன்மா ஒரு கணம் குளிர்கிறது.வெறுமைக்கும் அபத்தத்துக்கும்குடியே பதில் –தற்காலிகமானாலும்,எரியும் உண்மையானாலும். இப்படிச் சொல்லி,என் கோப்பையை உயர்த்தியபோது,ஒருவன் கேட்டான்: “இதற்குப் பின்னால் ஒரு கதைஇருக்க … Read more

அகராதிகளின் சமீபத்திய பிற்சேர்க்கை

உறவு — பொய்களின் முகமூடி அண்டை வீட்டார் — கண்ணில் புழுதி தூவும் நிழல்கள் குழந்தைகள் — அறியாமையின் துளிர்கள் செல்லப் பிராணி — அபத்தத்தின் குறியீடு தெருப்பிராணிகள் — அவலத்தின் அடையாளம் பிச்சைக்காரர் — சமூகத்தின் சீழ் ஏழை — விதியின் பொம்மை உழைப்பாளி — எந்திரங்களின் அடிமை ஆசிரியர் — பிளாஸ்டிக் குவளைகளை உருவாக்குபவர் ரவுடி — கத்தியில் கட்டப்பட்ட மனிதத்தின் எச்சம் ஞானி — மௌனத்தின் புதிர் தீர்க்கதரிசி — கனவுகளின் விற்பனையாளன் … Read more