கொஞ்ச நேரம்

எக்ஸைல் எடிட்டிங் முடியும் வரை வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்று இருக்கிறேன்.  இடையில் ஒரு வனத்துக்குச் சென்றிருந்தேன்.  வனத்தில் இப்போதும் குளிர்கிறது.  ஸ்வெட்டர் போடும் அளவுக்கு.  குளிர் காலத்தில் 13 டிகிரி இருக்குமாம்.  அந்த வனம் யாருமே கற்பனை செய்ய முடியாத ஒரு இடத்தில் உள்ளது.  திருச்சிக்கும் மணப்பாறைக்கும் நடுவே.  துவரங்குறிச்சி அந்த வனத்திலிருந்து 17 கி.மீ. என்று காட்டியது வழிகாட்டி. அந்த வழிகாட்டி உள்ள ஊரின் பெயரே வழிகாட்டி தான்.  அந்த வனத்தில் … Read more

மயன் மாளிகை (3)

சென்ற மாதம் நடந்த வாசகர் வட்ட சந்திப்புக்கு புதியவர் ஒருவர் வந்திருந்தார்.  இளைஞர்.  வயது 23.  மென்பொருள் துறை.  மிரட்சி கொள்ளச் செய்யும் அளவுக்குப் படித்திருக்கிறார்.  அவரையும் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் இருந்தோம்.  அராத்து இல்லை.  இளைஞர் என்னிடம் உரையாடுவதில் ஆர்வமாக இருந்தார்.  அவரிடம் என்னிடம் கேட்க குறைந்த பட்சம் நூறு கேள்விகள் இருந்தன.  அதில் ஒரு பத்தைக் கேட்டிருப்பார்.  அதற்கே ஒரு மணி நேரம் ஆயிற்று.  மற்ற எல்லோரும் எங்கள் வாய் பார்த்து அமர்ந்திருந்தனர்.  … Read more

மயன் மாளிகை (2)

பின்வரும் கடிதம் சென்ற ஆண்டு தருண் தேஜ்பாலுக்கு நான் எழுதிய கடிதத்தின் தமிழ் வடிவம்.  கொஞ்சம் சுருக்கப்பட்டதும் கூட.  தில்லியில் என்னைச் சந்தித்துப் பேச அழைத்திருந்தான்.   போவதற்கு முன் அவனுடைய நாவலையும் படித்து விட்டுப் போவதே நாகரிகம் என்று எண்ணிப் படித்தேன்.  அதன் விளைவுதான் இந்தக் கடிதம்.  ஆல்கெமியைப் படித்ததும் அவனுடைய மற்ற இரண்டு நாவல்களையும் படித்து விட்டுப் போகலாம் என்று முடிவு செய்தேன்.  அதையும் அவனிடம் சொன்னேன்.  சீக்கிரம் வா என்றான்.  நான் அவனுடைய மூன்று … Read more

மலையேறியின் கதை

சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு மோகன் என்ற வாசகர் எனக்குப் பின்வரும் கதையை அனுப்பியிருந்தார்.  இந்தக் கதை எதில் வருகிறது என்று யாருக்காவது தெரியுமா?  கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதியில் வருகிறது என்று எழுதாதீர்கள்.  ஒரிஜினலாக இதை எழுதியது யார், எந்த நூலில் வருகிறது என்று தெரிய வேண்டும். *** மலையேறி ஒருவன் பல ஆண்டு தயாரிப்புக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட சிகரத்தின் மீது ஏறும் தீர்மானத்தில் கிளம்புகிறான். உச்சியை அடையும் வேளையில் இருட்டிவிடுகிறது. எதையும் பார்க்க … Read more

மயன் மாளிகை

எக்ஸைல் 2-இல் வெற்றி அடைந்து விட்டேன்.  அதாவது, எக்ஸைல் 2-இன் பிரதியை அராத்து, கணேஷ் அன்பு, கார்த்திக் மூவரிடமும் கொடுத்திருந்தேன் அல்லவா?  மூவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே மாதிரி சொன்னார்கள்… நாவல் நன்றாக இல்லை.  இதையே பலவிதமாக சுவாரசியமான முறையில் மாற்றி மாற்றி சொன்னார்கள்.  கணேஷ் சொன்னார்.  பாட்சா படத்தைப் பார்த்து விட்டு, தலைவரிடமிருந்து இன்னொரு பாட்சா வரும் என்று பார்த்த போது பாபா வந்ததைப் போல் இருக்கிறது. அராத்து சொன்னார்.  அருமையான பொங்கல் கொடுக்கிறீர்கள்.  சாப்பிட்டேன்.  … Read more

காப்ரியல் மார்க்கேஸ்

டியர் சாரு, நல்லது… பெரும் துக்கம் சாரு. நீங்கள் அறிமுகப்படுத்தியவர்தான் காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ். என் முதல் கடித்ததைப் பார்த்தால் ருசு இருக்கும்… நான் மார்க்கேஸை  புவனோஸ் அய்ரஸில் அளப்பரிய கூட்டத்தில் எளியவனாய் நின்று பார்த்திருக்கிறேன் சாரு.  அவரைப் பார்த்த போது மனதுக்குள் சொன்னேன், “தகப்பனே, உன் அந்திமக் காலத்தில் நான் உன்னுடன் இருப்பேன்…” வாழ்க்கை பார்த்த்தீர்களா, என்னால் போக முடியவில்லை…. எனக்கு உங்கள் மேல்தான் கோபம் கோபமாக வருகிறது… மற்ற எல்லரும் மோஸ்தர் பின்னே போகும் … Read more