குற்றமும் தண்டனையும் (ஒரு நீதிக்கதை)

தஞ்சாவூர் கவிராயர் எழுதிய ஒரு கதையை என்னால் எந்த ஜென்மத்திலும் மறக்க இயலாது.  அவர் வீட்டில் ஒரு கல்யாணமுருங்கை மரம்.  அந்த மரத்தின் இலைகள் தன் வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் காரில் விழுந்து பெரிய இம்சையாக இருக்கிறது, அதை வெட்டுங்கள் என்று அண்டை வீட்டுக்காரர் இம்சை தருகிறார்.  ஒரு கட்டத்தில் அண்டை வீட்டுக்காரரின் இம்சை தாங்க முடியாமல் போகவே தஞ்சாவூர் கவிராயர் அரிவாளை எடுத்துக்கொண்டு போய் தான் பிரியம் பிரியமாக வளர்த்த கல்யாணமுருங்கை மரத்தை வெட்ட அரிவாளை … Read more

புத்தக விழா கடைசி நாள்

இன்றும் நேற்று போலவே மாலை நான்கு மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். நான்கு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (598 C) இருப்பேன்.

ஹிந்துவில் நேர்காணல்

தெ ஹிந்து தினசரியில் என்னையும் நந்தினியையும் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். வரும் 26, 27 தேதிகளில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக இந்தப் பேட்டி வெளிவந்தது. https://www.thehindu.com/litfest/the-hindu-lit-fest-interview-author-charu-nivedita-translator-nandini-krishnan-new-book-conversations-with-aurangzeb/article67744070.ece