புத்தக விழா குறிப்புகள் – 6

நேற்றைய மாலை இனிதே கழிந்தது.  சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமாதித்யனை சந்தித்தேன்.  கலி முற்றி விட்டதால் நானும் கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லி என் கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலையும் பெட்டியோவையும் அவரிடம் அளித்தேன்.  (ஸ்மாஷன் தாரா என்பது தவறு; ஸ்மஷான் தாரா என்றே வந்திருக்க வேண்டும்.  அடுத்தடுத்த பதிப்புகளில் (!) அந்தத் தவறை நீக்க வேண்டும்.)  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே மாதிரி இருக்கிறார்.  ஒரு மாற்றமும் … Read more

புத்தக விழா குறிப்புகள் – 5

பொங்கல் அன்று (15.1.2024) நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்குக்குப் போனேன்.  அமைதியாக இருந்தது.  காயத்ரி இல்லாததே காரணம் என்று வெளிப்படையாகத் தெரிந்தது.  ராம்ஜி சிந்தனையில் இருந்தார்.  வித்யா தீவிர சிந்தனையில் இருந்தார்.  பெங்களூரிலிருந்து என் வாசகியும் தோழியுமான ஸ்ரீயும் அவள் கணவர் சதீஷும் வந்திருந்தார்கள்.  கொஞ்ச நேரம் பொறுத்து ”காயத்ரி இல்லாமல் அரங்கே வெறிச்சோடின மாதிரி தெரிகிறது, அவர் இருந்திருந்தால் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும், செம பாஸிடிவ் எனர்ஜியாக இருக்கும், அவர் இல்லாமல் … Read more