சாரு ஆன்லைனை ரொம்பப் பேர் ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். புதியவர்களை எழுதி முடித்த அரை மணி நேரத்தில் ஒரு கடிதம். ”நீங்கள் வராவிட்டாலும் அவந்திகா வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பலாமே?” அட்ரா சக்கை. தம்பி, நான் இரண்டு நாய்களை வளர்க்கிறேன். பப்பு, ஸோரோ. இரண்டையும் வீட்டில் அப்படியே விட்டு விட்டு வீட்டைப் பூட்டி விட்டு அவந்திகா கிளம்ப மாட்டாள். நான் வந்தால்தான் கிளம்புவாள். நான் அப்படி இல்லை. இரண்டையும் விட்டு விட்டுக் கிளம்புவேன். அதிக பட்சம் ஆறு மணி நேரம் இரண்டும் சாதுவாக இருக்கும். அதற்கும் மேல் வீட்டில் ஆள் இல்லையெனில் வீடு துவம்சம்.
”இனிமேல் கிளம்பும் போது ஒரு ஃபோன் பண்ணி விட்டுக் கிளம்புங்கள்” என்றாள் அவந்திகா. அது ஒன்றுதான் பாக்கி, அதையும் செய்கிறேன் என்றேன்.
Comments are closed.