முன்வெளியீட்டுத் திட்டத்தின் முன்னோடி

ஹாய் சாரு,
அன்று மகாமுத்ராவில் உங்களிடம் சொன்னேன்: ” சாரு, இந்த முன்வெளியீட்டுத் திட்டம் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம்; மனுஷ்யபுத்திரன் முதலியோர் ஒன்று திட்டுவார்கள். அல்லது, அவர்களும் இதைப் பின்பற்றுவார்கள். என்ன நடந்தாலும், தமிழின் முன்வெளியீட்டுத் திட்டத்தின் முன்னோடியாக நீங்கள் இருப்பீர்கள்.”

இப்பொழுது, மனுஷ்யபுத்திரன் தனது ‘அந்நிய நிலத்தின் பெண்’ கவிதைத் தொகுப்பை முன்பதிவுத் திட்டத்தில் கொண்டு வருகிறார். ரூ.480 மதிப்புள்ள புத்தகத்தை டிசம்பர் 12 முதல் 24 வரை ரூ.300 க்குத் தருகிறார். புத்தக வெளியீடு டிசம்பர் 25.

உயிர்மையிலிருந்து வரப்போகும் மேலும் சில நூல்களுக்கு இந்தத் திட்டம் தொடரும் என்று தன முகநூல் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

ஸ்ரீராம்.