திருப்பூர் & பெரம்பலூர் புத்தக விழா

ஜனவரி 30 முதல் ஃபெப்ருவரி 8 வரை திருப்பூரிலும், பெரம்பலூரிலும் புத்தக விழா நடைபெறுகிறது.

புதிய எக்ஸைல், ராஸலீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் 1, 2, 3 ஆகியவை கிழக்கு அரங்கில் கிடைக்கும். சாருவின் பிற புத்தகங்கள் உயிர்மை அரங்கில் கிடைக்கும்.

கிழக்கு அரங்க எண்:

திருப்பூர் புத்தக விழாவில் அரங்கு எண் 77, 78;
பெரம்பலூர் புத்தக விழாவில் அரங்கு எண் 30, 31.

உயிர்மை அரங்கு எண்:

திருப்பூர் புத்தக விழா அரங்கு எண் 29;
பெரம்பலூர் புத்தக விழா அரங்கு எண் 106 .

செய்தி கேள்விப்பட்டு திருப்பூர் செல்லலாம் (என் செலவில்), வாசகர்களுக்கு என் நூல்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கலாம்; வாசகர்களுடன் கலந்துரையாடலாம் என்று எண்ணினேன்.  ஆனால் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.  ஈரோட்டில் நண்பர்கள் உள்ளனர்.  ஆனால் திருப்பூர் புத்தக விழா நிர்வாகிகளுடன் எனக்குத் தொடர்பு இல்லை.