To You Through Me – 9

இணைய தளத்தில் இரண்டு தொடர்கள் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  To You Through Me என்ற இந்தத் தொடர்.  மற்றும் பூச்சி.  இந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதி இன்று.

நேற்றைய நகுலன் உரை நான் எதிர்பார்த்ததை விட உயர்தரமாக அமைந்து விட்டது.  கொஞ்சம் பயந்துகொண்டுதான் இருந்தேன்.  ஏனென்றால், நகுலனின் வாழ்க்கை செல்லப்பாவின் வாழ்க்கையைப் போல் அத்தனை சம்பவங்கள் நிறைந்தது இல்லை.  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனித்த வீட்டில் ஒரே ஒரு பணிப்பெண்ணுடன் எப்போதுமே தனியாக வாழ்ந்த, பயணங்களே இல்லாத, திருமணம் ஆகாத ஒரு introvert எழுத்தாளரின் வாழ்க்கையில் சம்பவங்கள் ஏது?  வீடு முழுதும் புத்தகங்கள்.  எப்போதாவது வந்து போகும் நண்பர்கள்.  எப்போதாவது வாசலில் வந்து நின்று கொண்டு சாலையில் செல்வோரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரின் வாழ்க்கையில் வண்ணங்கள் என்ன இருக்கும்?  நகுலனின் வாழ்க்கை எழுத்தினால் ஆனது.  தியாகய்யருக்கு சங்கீதத்தைப் போல, ராம நாமத்தைப் போல நகுலனுக்கு எழுத்து, சுசீலா.  சுசீலா என்பது ஒரு படிமம்.  பரமஹம்சருக்கு அது காளி.   நகுலனைப் பற்றி நினைக்குந்தோறும் எனக்கு ஐரோப்பிய கிராமங்களில் வசிக்கும் தொண்ணூறு வயதுக்கு மேற்பட்ட முதியவர்களைப் பற்றிய காட்சி ரூபம் கண்ணில் தோன்றும்.  அவர்களின் தனிமை காவியத்தன்மை கொண்டது.  ஆனால் இது பற்றி எப்படி இரண்டு மணி நேரம் பேச முடியும்?  அதிலும் நகுலனின் எழுத்து சாதாரண வாசகர்களுக்குப் புரிவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.  பேச்சு எப்படி இருக்கும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வார்கள் என்பது பற்றியெல்லாம் அச்சமும் குழப்பமும் இருந்தது.  என்றாலும் ஒரே ஒரு தைரியம்.  சி.சு. செல்லப்பா, க.நா.சு. போன்ற முன்னோடிகள் அத்தனை பேரையும் தராசின் ஒரு தட்டில் வைத்து நகுலனை இன்னொரு தட்டில் வைத்தாலும் நகுலனின் தட்டு தாழ்ந்துதான் இருக்கும்.  இப்படிச் சொல்வதால் அது மற்ற எழுத்தாளர்களைத் தாழ்த்துவதாக அர்த்தம் இல்லை.  எந்த எழுத்தாளரையும் நகுலனோடு ஒப்பிட முடியாது என்பதே நான் சொல்ல வந்தது.  உலக அளவிலுமே அவரைப் போன்ற எழுத்தாளர்கள் இல்லை.  வில்லியம் பர்ரோஸ் போன்ற எழுத்தாளர்கள் நகுலனின் genre தான் என்றாலும் நகுலன் ஏன் தனித்து நிற்கிறார் என்பதை விளக்கி விடலாம் என்றே நினைத்தேன்.  இந்தக் காரணங்களால்தான் சற்று அச்சமாக இருந்தது.  அதே சமயம் பேசி விடலாம் என்ற தைரியமும் ஏற்பட்டது.

ஆனால் எதிர்பார்க்கவே இல்லை.  இரண்டு மணி நேரம் எனத் திட்டமிட்டது இரண்டரை மணி நேரம் நீண்டு, கேள்வி பதில் நேரத்தோடு மூன்றரை மணி நேரம் ஆகி விட்டது.  இத்தனைக்கும் நான் தயாரித்திருந்த குறிப்புகளில் அறுபது சதவிகிதத்தை மட்டுமே பேசியிருந்தேன். 

ஆனால் இந்த மூன்றரை மணி நேரம் எனக்கு ஆச்சரியமாக இல்லை.  ஏனென்றால், வாசகர் வட்ட சந்திப்புகளில் மாலை ஏழு மணிக்கு ஆரம்பித்தால் காலை ஐந்து மணி வரை பேசிக் கொண்டிருப்பேன். 

சென்ற மாத செல்லப்பா சந்திப்பில் பலருக்கும் – அதாவது சரியாக ஆறு மணிக்கு ஆஜர் ஆனவர்களுக்குக் கூட இடம் கிடைக்கவில்லை என்பதால் பலரும் ஐந்தரையிலிருந்து வந்து ’இடம்’ பிடித்து விட்டனர்.  ஐந்து அம்பதுக்கு ஐம்பது பேர் வந்து விட்டனர்.  அதன் பிறகு எத்தனை பேர் வந்தார்கள் என்ற விபரம் எனக்குத் தெரியாது.  சந்திப்பெல்லாம் முடிந்த பிறகு என் நண்பர் ஒருவரிடம் கேட்டீர்களா என்று கேட்ட போது சரியாக ஆறு மணிக்கு வந்ததாகவும் நூறு பேர் முடிந்திருந்ததாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.  அவருக்கு வருத்தம், எனக்கு மகிழ்ச்சி.  ஒரு வார காலமாக இரவு பனிரண்டுக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்து ரணகளமாகிக் கொண்டிருந்தேன்.  எனக்கு ஆறு மணி நேர உறக்கம் போதும்.  ஆனால் அது குறைந்தால் சோர்வு தூக்கும்.  எப்போதும் அரைத்தூக்கத்திலேயே இருப்பது போல் இருக்கும்.  ஆனால் வேலை ஜரூராக நடக்கும்.  அதில் வேறுபாடு இருக்காது.  அந்த உழைப்புக்கு இத்தனை பேர் அந்த அதிகாலையிலேயே வந்தது உற்சாகமாக இருந்தது. 

சந்திப்பு முடிந்ததும் பத்து மணி அளவில் பலர் தொலைபேசியில் அழைத்தார்கள்.  ஒருவர் செந்தில்.  கோணல் பக்கங்களைப் படித்திருந்தால் உங்களுக்கு செந்திலைத் தெரிந்திருக்கும்.  இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கோணல் பக்கங்களை எழுதிக் கொண்டிருந்தபோது என்னோடு தொடர்பில் இருந்த பல வாசகர்கள் இப்போது என்னை வாசிக்கிறார்களா என்றே தெரியவில்லை.  சுத்தமாகத் தொடர்பிலேயே இல்லை.  குறிப்பாக ஐரோப்பிய வாசகர்கள்.  அப்போது செந்தில் ஜெர்மனியில் இருந்தார்.  ஆனால் அவர் இந்தியா வந்த பிறகும் தொடர்ந்து என்னை வாசித்துக் கொண்டே இருக்கிறார்.  கோணல் பக்கங்களில் அவர் எழுதிய கடிதம் உங்களில் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?  ஸீரோ டிகிரியையும் பௌதிகத்தில் வரும் ம்யூவையும் இணைத்து எழுதப்பட்ட கடிதம்.  ம்யூ என்பதற்கு விளக்கம் பார்த்தேன்.  கீழ்க்கண்டவாறு இருந்தது.  ஒரு மண்ணும் புரியவில்லை. 

μ can describe a lot of quantities. Sometimes it’s used in kinematics for coefficients of friction, or even in particle physics for the reduced mass of a particle.

நகுலன் பற்றிய என்னுடைய மூன்று மணி நேர உரையைப் பற்றி நாத்தழுதழுக்க நீண்ட நேரம் பேசினார் செந்தில்.  இறுதியாக அவர்  சொன்ன ஒரு வார்த்தை Trance.  மூன்று மணி நேரம் ட்ரான்ஸில் இருந்தோம்.  கிட்டத்தட்ட இதைப் போலவேதான் மற்ற இரண்டு நண்பர்களும் சொன்னார்கள்.  ஒருவர் திருவல்லிக்கேணி முரளி.  ஜக்கி வாசுதேவின் சீடர்.  என்னுடைய பிரதான வாசகர்.  இருவர் சொல்வதும் ஒன்றேதான் என்பது அவர் கட்சி.  அந்த மூன்று மணி நேரமும் ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவம் என்றார்.  மற்றொரு நண்பர் கிருஷ்ணமூர்த்தி.  இதுவரை அவர் பழக்கமில்லை.  மின்னஞ்சல் அனுப்பி விட்டுப் பேசினார்.  நீண்ட காலமாக என் வாசகராக இருக்கிறார் என்று அறிந்தேன்.  மூத்த விஞ்ஞானி.  ஜப்பானில் இருபது ஆண்டுகள் இருந்து விட்டு இந்தியா திரும்பியிருக்கிறார்.  விஞ்ஞானி என்றால் எந்தத் துறை என்று அவரிடமே கேட்கக் கூடாது என்று அவரைப் பற்றிப் படித்தேன்.  அவர் இருக்கும் துறையே எனக்குப் புரியவில்லை.  எனக்கெல்லாம் ஆசிரியர், பேராசிரியர், மருத்துவர், போலீஸ், ஐ.டி., சினிமா, வியாபாரம், அரசு ஊழியர் என்று சொன்னால்தான் புரியும்.  இப்போதெல்லாம் யாருடைய வேலை விபரத்தையாவது கேட்டால் தலைதான் சுற்றுகிறது.  அப்படித்தான் என்னுடைய பத்தாண்டுக் கால நண்பரும் வாசகருமான குமரவேல் பற்றிக் கடைசியில் ஜெயமோகன் எழுதித் தெரிந்து கொள்ளும்படி ஆகி விட்டது.  மிகவும் லஜ்ஜையாகி விட்டது.  கடிதத்தையே Your fanatic என்றுதான் முடிப்பார்.  வாசகர், நண்பர் என்பதைத் தவிர்த்து அவர் ஒரு மிருக வைத்தியர் என்று மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன்.  அதுவும் என்னிடம் பூனைகள் இருப்பதால்.  பூனைக்கு உடம்பு சரியில்லாமல் போனால் போன் செய்து மருத்துவம் கேட்டுக் கொள்வேன். பா. ராகவன் சொல்லித்தான் அவர் ஜோதிடத்தில் விற்பன்னர் என்பதே தெரிந்தது.  அதற்குப் பிறகுதான் ஜெயமோகன் எழுதி டாக்டர் குமரவேல் மிகப் பெரிய ஆய்வுகள் பலவற்றைச் செய்திருப்பவர் என்றே தெரிந்து கொண்டேன்.  அப்புறம் அவரை அழைத்து “ஏன் இதையெல்லாம் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று கோபித்துக் கொண்டபோது ”ஆ, பலமுறை சொல்லியிருக்கிறேனே சார்!” என்கிறார்.  பிரச்சினை என்னிடம்தான்.  இலக்கியம் தவிர வேறு எதுவுமே மண்டையில் ஏறுவதில்லை.  இப்படி இருந்தால் யார் உங்களிடம் பழகுவார்கள் என்று ஒரு இடி இடித்தார் இன்னொரு நண்பர்.  அதனால் கிருஷ்ணமூர்த்தி விஷயத்தில் முந்திக் கொண்டு விட்டேன்.  செந்தில் சொன்னதைத்தான் கிருஷ்ணமூர்த்தியும் சொன்னார்.  இன்னொன்றும்.  உரையின் இடையே ஸ்மோக்கி வந்து (அது மட்டும்தான் கொஞ்சம் ரவுடி) கறாபுறா என்று கத்தியபோது ரொம்ப மிருதுவான குரலில் மென்மையாக சத்தம் போடாதடா கண்ணு என்று சொன்னேன்.  அதுவும் உடனடியாக சத்தத்தை நிறுத்தி விட்டது.  நான் அப்படிச் சொன்னதை ரசித்தேன் என்றார் கிருஷ்ணா.  (பெயரைச் சுருக்குவது எனக்குப் பிடிக்கும்.  நாஞ்சிலுக்குப் பிடிக்காது.  ஐயோ, நாஞ்சில் பெயரையும் சுருக்கி விட்டேனே!  தொலைந்தேன்!)

வழக்கம்போல் நான்கு மணிக்கே எழுந்து பூனைகளுக்கு மீன் அவித்துக் கொடுத்து விட்டுத்தான் ஆறு மணி சந்திப்புக்குத் தயாரானேன்.  தீவிர ஊரடங்கு சமயத்தில் மீன் ஏது என்ற சந்தேகம் எழவில்லையா?  என்னுடைய பூனை நாவலில் சொல்கிறேன்.  அது பெரிய சாகசக் கதை. 

நகுலனைப் படித்ததும், நகுலனைப் பேசியதும் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்கள்.  அதில் கலந்து கொண்டவர்களுக்கும் சதீஷ்வருக்கும் என் மனமார்ந்த நன்றி.  இருபது பேர் பணம் அனுப்பியிருந்தார்கள்.   இருவர் அமெரிக்காவில் இருந்து.  பதினெட்டு பேர் இந்தியா.  மிக நல்ல விஷயம்.  சாருஆன்லைன் தளத்துக்காக நன்கொடை/சந்தா அனுப்பும் நண்பர்கள் இந்த மாதாந்திரக் கூட்டத்துக்காக எதுவும் அனுப்ப வேண்டாம்.  ஏதாவது ஒன்றுக்கு அனுப்பினால் போதும்.  அனுப்பாதவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.  நேற்று வர முடியாதவர்களுக்கு அந்தப் பேச்சின் மூன்றரை மணி நேர காணொலியும் இருக்கிறது.  அதற்கான ஏதோ ஒரு கட்டணத்தைச் செலுத்தினால் அதன் லிங்க்கை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.  எப்படிக் கட்டணம் செலுத்துவது என்று கட்டுரையின் கடைசியில் தெரிந்து கொள்ளலாம்.  எவ்வளவு கட்டணம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.  நேற்று வந்தவர்களுக்கும் தேவையெனில் எழுதுங்கள்.  அனுப்பி வைக்கிறேன்.   

நேற்றைய சந்திப்பு பற்றிய இரண்டு பதிவுகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடும் வழக்கம் இல்லை.  ஆனால் விதிவிலக்காக ராஜா வெங்கடேஸ்வரன் என் நெருங்கிய நண்பர் என்பதால் அவரைக் கேட்கமாலேயே அவரது பர்சனல் கடிதத்தை வெளியிடுகிறேன்.  ஏதோ நீங்களும் படிக்க வேண்டும் என்று தோன்றியது.     

வணக்கம் சாரு,

மன்னிக்கவும். 

இன்றைய நகுலன் சந்திப்பில் என்னால் முழுமையாகப் பங்கேற்க இயலவில்லை. சுமார் ஒருமணி நேரம் தங்களின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக எட்டு மணியளவில் எழும் அப்பா இன்று சீக்கரமாகவே எழுந்து விட்டார். 

நீண்டதூரம் கார் ஒட்டுகையில் தங்களின் உரைகளை கேட்டுக்கொண்டே ஓட்டுவது என் வழக்கம். ஆனால் கார் ஒட்டுவதைப் போல எளிதாக இல்லை சாரு, படுக்கையில் இருப்பவரை மூத்திரம் பெய்ய வைத்து, உடலைத் துடைத்து, டயப்பர் மாற்றுவது எல்லாம். முழுமையான கவனத்தைக் கோருவது. சிறிது ஏமாந்தாலும் போச்சு.

இப்படித்தான் கடந்த முறை அவரை மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது ஒருநாள் மூத்திரக் குடுவையை அவருக்கு மூத்திரம் பெய்ய ஏதுவாய் ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறுகையால் ஃபோனைப் பிடித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.  கண்கள் இரண்டும் குடுவையின் மேலே குடுவை நிரம்புகிறதா என்று பார்த்துக்கொண்டே‌ இருந்தது. எங்கோ ஒரு நொடி கவனம் சிதற எல்லாம் முடிந்துவிட்டது. குடுவை நிரம்பி அவர் அணிந்திருந்த  உடை, படுக்கை எல்லாம் ஈரமாகிவிட்டது‌. அங்கே பணியில் இருந்த செவிலியரும், தூய்மைப் பணியாளரும் முனுமுனுத்துக்கொண்டே சுத்தம் செய்தனர்‌.  

தங்களின் அற்புதமான இந்த உரையை முழுமையாய்க் கேட்காமல் தவறவிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது.  நினைவுப் பாதை புரியவில்லை என்கிற ஒரு கேள்விக்கு, நீங்கள் “ஏன் எல்லாமே புரிய வேண்டும்? ஒரு குழந்தைக்குத் தான் பார்க்கும் எல்லாம் புரிந்து விடுகிறதா? ஒரு குழந்தை எப்படி பெரியவர்களை அண்ணாந்து பார்க்கிறதோ அது போலத் தான் பார்க்க வேண்டும். புரிவதை ஏற்றுக்கொண்டு, புரியாததை புரிந்துகொள்ள முயலலாம்” என்று  சொன்னீர்கள் சாரு. இது நினைவுப் பாதையை எப்படி அணுகவேண்டும் என்கின்ற ஒரு சித்திரத்தை அளித்தது. அதுபோல நகுலனை எப்படி அணுக வேண்டும் என்பதைத் தங்களின் முழுமையான உரையைக் கேட்டால் ஒரு தெளிவு பிறக்கும் சாரு. 

அன்புடன்,

ராஜாவெங்கடேஸ்வரன்

கோவை.

மற்றொரு பதிவு:

அருணாச்சலத்துக்கு நன்றி! சாருவின் மிகச் சிறப்பான உரை இது. மூன்று மணி நேரம் கடந்ததே தெரியவில்லை. நகுலனைப் புரிந்துகொள்வதற்கு இந்த வழிகாட்டுதல் தேவை என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் அவருடைய நிழல்கள் குறுநாவல் படிக்கும் போது எனக்கு தோன்றியது அவர் text-இல் இருந்த ‘brevity’ – சுருங்கச் சொல்லுதல். சில கதாப்பாத்திரங்களைப் பற்றிய வர்ணனைகள் ஒரு வரிக்கு மேல் நீளவில்லை. இதையே சுந்தர ராமசாமி இந்த நூலின் முன்னுரையிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

சாரு குறிப்பிட்ட மற்றுமொரு முக்கியமான திறவுச்சொல் “MIRROR”. அதைக் கேட்ட நொடியில் Jose Saramago-வின் “The Double” நினைவில் வந்து விழுந்தது.

***

அருணாச்சலத்தின் இந்தப் பதிவு என் சந்திப்பு முடிந்து ஒரு மணி நேரத்தில் முகநூலில் வந்தது.

இன்றைய காலை அர்த்தமானது..

மிகச் சிக்கலான தர்க்கரீதியான அம்சங்களுடன் கூடிய இலக்கிய படைப்புகளுக்கு சொந்தக்காரரான நகுலன் குறித்த சாருவின் தொடர்ச்சியான 3 – 1/2 மணிநேர Zoom மூலமான, அற்புதமான உரை இதை சாத்தியமாக்கிற்று…

முதல் 1 மணி நேரம், பொதுவாக நகுலனின் லெளகீக வாழ்க்கை முறை, படைப்புகள், வாசிப்பு, நண்பர்கள், சந்திப்புகள், உரையாடல்கள், போன்ற தளங்களில், நகுலனை எளிதாக அறிமுகப்படுத்தி, கேட்போரை ஒரு மிக முக்கியமான உரைக்கு, அவர் பாணியிலேயே சாரு தயார்படுத்தினார்..

அதற்குப்பின்…                   

நடந்த சாருவின் தொடர் உரையில் நிகழ்ந்த அதிசயத்தருணங்கள், கீழே கண்ட தளங்களில், வெளிச்சக்கீற்றுகளை பாய்ச்சின…

Questioning
Paranoia
Integrity in the text
Skepticism
Values
Bricolage
Insight
Physiological awakening
Pleasure of the text
Inquiry
Author”s state after presentation

The possibilities of combine creativity of both the Author and reader through the text, in Postmodernism.

இதை எளிதில், நமக்கு புரியவைப்பதற்காக, சாரு எடுத்துக்கொண்ட எடுத்துக்காட்டு சான்றுகள்..

Skid row of Los Angeles.
Naked Lunch by William S Burroughs
Julio Cortazar
Cerl Jung
Sigmund Freud
Italo Calvino
Alejo Carpenter
Ludwig Wittgenstein
Kathy Acker
தேவாரம்
புறநானூறு.
ராமகிருஷண பரமஹம்சரின் நூல்கள்

The literary understanding of the terms :

Bliss, Magnus, Values, madness, Integrity, existence….

உலகளாவிய இலக்கிய ஓப்பீடுகளுடன், நகுலனின் சிறுகதைகள், நாவல் மற்றும் கவிதைகள் குறித்தான ஒரு அர்ப்பணிப்பான உரை.

ஏற்கனவே நகுலனின் படைப்புகளை வாசித்திருந்தாலும்…
மேலும் பல புதிய கோணங்களில் நகுலனை உள்வாங்கிக் கொண்டு, கொண்டாடும் அளவிற்கு என்னை தயார்படுத்தியது சாருவின் தேர்ந்த விளக்கவுரை..

Excerpts from Nakulan’s works..

நகுலனின் படைப்புகளிலிருந்து, சாரு மிக முக்கியமான தர்க்கரீதியான பகுதிகளை வெகு அழகாகவும், அர்த்தத்துடனும் வாசித்தும் விளக்கினார்…

மொத்தத்தில் சாருவுக்கு இந்த மூன்றரை மணிநேரம் போதவில்லை.. அவர் தயாராகி வந்ததில், 60 சதவீதம் மட்டுமே கொடுத்திருந்தார் என்றே எண்ணுகிறேன்…

இந்த உரையின் வாயிலாக, நான் ஏற்கனவே கையாளுகிற படித்தல் முறையான….

Seeing – crossing – pointing – understanding the madness of the text – travelling through the madness – enjoying the madness – comparing with the madness of others – celebrating the nuances of madness – Trying to get rid of the madness of the text-

Then… Rereading – Rumination…

இந்த வாசிப்பு முறையினை, தன்னுடைய அறிவுப்பூர்வமான உரையால், மேலும் வலுவூட்டிய சாருவுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களும், நன்றிகளும்….

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai