புத்தக விழாவுக்கு வருகிறேன்…

இன்று காலை பதினோரு மணிக்கு என் வீட்டுக்கு எதிரே உள்ள (அப்பு இரண்டாவது தெரு) ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிஃபீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். போட்டதிலிருந்து ரெண்டு பெக் ரெமி மார்ட்டின் போட்டது போல் இருக்கிறது. போட்டது வந்தது எல்லாம் கதை போல் நடந்தது என்பதால் குமுதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். தடுப்பூசி போட்டு விட்டதால் என் கண்காணிப்பாளர் எனக்கு புத்தக விழா செல்ல அனுமதி அளித்து விட்டார். சனிக்கிழமை மாலை நாலு மணிக்கு ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எட்டு வரை கையெழுத்துப் போடலாம் என்று திட்டம். இப்போது பல ஸ்டார் எழுத்தாளர்கள் போட்டிக்கு வந்து விட்டதாலும் நான் புதிய டைட்டில்கள் எதுவும் விடாததாலும் யாரும் கையெழுத்துக்கு வரவில்லை எனில் முன்கூட்டியே கிளம்பி விடுவேன். எனக்குப் பொறாமை தாஸ்தி.