வைர சூத்திரத்தின் விலை

ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான்.  மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது.  ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள்.  என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான்.  அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன.  அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும்.  நூறு பிரதிகள் விற்கும்.  எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும்.  நேர்காணல் வந்த … Read more

ஒரு நேர்காணல்

ஏற்கனவே எழுதியதுதான். தமிழ் எழுத்தாளனாக சபிக்கப்பட்ட ஒருவன் விமானம் ஓட்டும் வேலையையெல்லாம் கற்றுக்கொண்டு ஆக வேண்டும். கேட்டால், ஜெயமோகன் ஓட்டுகிறாரே, உங்களுக்கு இதுகூடவா தெரியாது என்பார்கள். தமிழ் எழுத்தாளனுக்கு இந்தியத் தத்துவம் தெரிய வேண்டும். மேலைத் தத்துவம் தெரிய வேண்டும். உலக சினிமா தெரிய வேண்டும். ஜெர்மானிய தத்துவவாதி Jurgen Habermas பற்றி நாலு மணி நேரம் உரையாற்றத் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் உலகத்தில் தெரியாத விஷயமே இருக்கக் கூடாது. அவன்தான் தமிழ் எழுத்தாளன். இந்த … Read more

இளையராஜா – இசை – மனநோய் கூடாரங்களின் கூக்குரல் – அராத்து

(பின்வரும் கட்டுரையை ஃபேஸ்புக்கில் படித்தேன். இங்கே பகிர வேண்டும் என்று தோன்றியது. மிக மோசமான தமிழில் மிகச் சிறந்த அவதானங்களைக் கொண்ட கட்டுரை. இதில் உள்ள கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு. பொதுவாக இப்படி நான் பகிரும் கட்டுரைகளை எழுதியவரின் அனுமதி இன்றி மொழியை சரி பார்த்தே பகிர்வேன். அதற்கெல்லாம் இப்போது நேரம் இல்லை. அதனால் அராத்து எழுதிய கொச்சைத் தமிழை மாற்றாமலேயே இங்கே பகிர்கிறேன். இளையராஜா பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் … Read more

செய்திகளும் சமூகமும்…

வணக்கம் சாரு. எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. யாரிடம் கேட்பதென்று தெரியவில்லை. அதனால் உங்களிடம் கேட்கிறேன். நேற்று தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்தேன். இந்தத் தேர்தலில் இருந்தது போல் நிம்மதியாக இதுவரை எந்தத் தேர்தலின் போதும் நான் இருந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அரசியல் உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பேன். எந்த சித்தாந்தத்திலும் ஆழமான பார்வையோ களச்செயல்பாடோ கிடையாது. பள்ளிக்கல்வி முடிக்கும் வரை என்னுடைய ஆர்வமெல்லாம் செய்தித்தாள்கள், ஒரு சில வெகுஜன இதழ்களை வாசிப்பது, … Read more

காந்தளூர்ப் பயணம்

பெங்களூரில் வரும் 9, 10, 11, 12 நான்கு தினங்கள் இருப்பேன். ஒன்பதாம் தேதி இரவு ஒன்பதரை மணிக்கு பெங்களூர் வந்து சேர்கிறேன். மாலையில் கிளம்பும் வந்தே பாரத் ரயில். பன்னிரண்டாம் தேதி இரவு என்னை சாவகாசமாகச் சந்திக்கலாம். இப்போதும் கோரமங்களாவில் எண்பதடி சாலையில் உள்ள ஒரு இல்லத்தில் தங்குவேன். பன்னிரண்டாம் தேதி Indian Institute of Human Settlements விடுதியில் தங்குவேன். மறுநாள் மதியம் பேச வேண்டியிருப்பதால் இரவு முழுவதும் கண் விழிக்க முடியாது. பத்தாம் … Read more

எனக்குப் பிடித்த ஒரே நாவல்?

கற்றது கைம்மண் அளவு என்பார்கள். நான் பல கைம்மண் அளவுகள் படித்திருக்கிறேன். அந்த வகையில் சர்வதேச அளவில் உங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு நாவலைச் சொல்லுங்கள் என்றால் ஸோர்பா தெ க்ரீக் நாவலைச் சொல்லுவேன். அந்த நாவல் மனித வாழ்க்கை குறித்த ஒருவரின் அடிப்படை நம்பிக்கைகளையே மாற்றி விடக் கூடியது. இந்திய மொழிகளில் உங்களுக்குப் பிடித்த ஒரே நாவல் எது என்று கேட்டால் தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலைச் சொல்லுவேன். அதன் தமிழ் … Read more