அன்பு நாவலை வாங்குவதற்கு…

இன்றும் புத்தக விழாவுக்கு ஐந்து மணிக்கு வந்து ஒன்பது வரை இருப்பேன். நேற்று ஔரங்ஸேப் நாவலை வாங்கி என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களிடம் கூட அன்பு நாவல் வாங்கவில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆம், அந்த நாவலை நான் முச்சந்தியில் நின்று விற்க விரும்புகிறேன். காசு பார்ப்பதற்காக அல்ல. எனக்குத் தேவை லட்சங்களில். புத்தகம் எத்தனைதான் விற்றாலும் ராயல்டி ஆயிரங்களில்தான் கிடைக்கும். அன்பு நாவல் லட்சக்கணக்கான பேரிடம் சேர வேண்டும் என்று நான் நினைப்பதன் காரணம், அவர்களின் வாழ்க்கை … Read more

ஒளி முருகவேள்

என் வாழ்வில் ஒரு ஒளியாய்ச் சேர்ந்தவர் ஒளி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒளி முருகவேள். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஒளி என்பது புனைப்பெயர் அல்ல. அவர் தந்தை பெயர் ஒளி என்று ஆரம்பிக்கும். தந்தை மறைமலை அடிகளின் மாணவர். ஒளியைப் போன்ற சாத்வீக மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வகுமார், குமரேசன் இருவரும் கூட சாத்வீகம்தான் என்றாலும் ஒளி அவர்களை விட சாத்வீகம். என் திட்டுகளையும் கூட சிரித்துக் கொண்டே கேட்டுக் … Read more

வசிய லேகியம்

வசியமருந்துக்காரனொருவனை யதேச்சையாய்க் கண்டேன் ஒரு பெண்ணை வசியப்படுத்த வேண்டுமென்ற நீண்டநாள் ஆசையைச் சொன்னேன் “கவலை வேண்டாம் விலைதான்  கொஞ்சம் அதிகம்” என்றவனிடம் “உயிரையும் கொடுப்பேன் விலையாக மருந்தைக் கொடு முதலில்” என்றேன். நாற்பது மூலிகைககள் சேர்ந்ததிந்த லேகியம் உன் இஷ்ட ஸ்த்ரீயை முத்தமிடுமுன் உதட்டில் இட்டுக் கொள் ஜென்மத்துக்கும் அடிமையென்றான் முதல் சந்திப்பின் முதலாவது முத்தத்தின் போது மறக்காமல் இட்டுக் கொண்டேன் ஏய் வசியக்காரா ஜென்மத்துக்கும் போதுமிந்த முத்தம் இந்த நினைவிலேயே  ஏழேழுஜென்மம் வாழ்ந்து விடுவேன் சொல்லி … Read more

அன்பு நாவல் பற்றிய ஒரு நேர்காணல்

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவல் பற்றிய சிறிய அறிமுகத்தை கேள்வி பதில் மூலமாக நானும் அராத்துவும் நேற்று புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் நிகழ்த்தினோம். அரங்கு எண் எஃப் 19. பல நண்பர்கள் புத்தகம் தபாலில் கிடைக்குமா, ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்ய முடியும். புத்தக விலை 340 ரூ. மற்ற விவரங்களை நீங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கே … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு குறித்து ஒரு வார்த்தை

அன்பு நாவல் வெளிவந்து விட்டது.  கையெழுத்திட்டுக் கொடுப்பதற்காக நாளை நான்கு மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிற்கு வந்து விடுவேன். அரங்கம் எண் எஃப் 19.   இது குறித்து ஒரு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டும்.  அச்சகத்திடம் ராம்ஜி 200 பிரதிகள் சொல்லியிருந்ததாகத் தெரிந்து நான் அச்சகத்திடம் 300 பிரதி என்று சொல்லி விட்டேன்.  ராம்ஜி அப்போது சர்வதேசப் புத்தகச் சந்தையில் இருந்ததால் அவரிடம் தெரிவிக்க முடியவில்லை.  அவரிடம் மாலையில்தான் தெரிவித்தேன்.  நட்பு கருதி நான் எடுத்துக் கொண்ட உரிமை … Read more

ஒளித்தீற்றல்: ஸ்ரீ

அதிகாலையிலொரு சொப்பனம்கண்காட்சி போன்றவொரு இடத்தில்நீயும் நானும் பேசியபடிஉலாவிக் கொண்டிருக்கிறோம்மறுநாள் நீ வரவில்லை என்கிறார்கள்எங்கு தேடியும் கிடைக்கவில்லைஎன் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லைதிரும்பி வர இயலாதபடி மறைந்து விட்டாய்அடக்க இயலாமல் தேம்பித் தேம்பி அழுகிறேன்உணர்வு நிலைகொள்ளவில்லை***உனக்கான ஒரு கூட்டம்நானும் இருக்கிறேன்உன் நண்பனொருவன் என்னை அணுகிஉன்னை எனக்குப் பிடித்திருக்கிறதுகலவி கொள்ளலாமா என்கிறான்***ஒரு தனியறையில் அவனும் நானும்மூர்க்கமாக முயங்கிக் கிடக்கிறோம்இருவரும் சரியும் நிலையில்கைபேசி ஒலிக்கமிஸ் யூ குட்டி, எங்கே இருக்கிறாய்என்கிறான் கணவன்நித்திரையிலிருந்து கண்கள் திறக்ககனவென நம்ப நொடி சில ஆயிற்று***நான் இல்லை என்றால் … Read more