திமுகவுக்கு எத்தனை சீட்?
நள்ளிரவில் கொடுங்கனா வந்து எழுந்தேன். கனவில் கண்டது , திமுகவுக்கு இரண்டு சீட்டுக்குள் கிடைக்கும்.
நள்ளிரவில் கொடுங்கனா வந்து எழுந்தேன். கனவில் கண்டது , திமுகவுக்கு இரண்டு சீட்டுக்குள் கிடைக்கும்.
மூன்று மாதம் ஓய்வாக இருந்து படிக்கலாம், இசை கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் விதி வேறு திசையில் இழுத்துக் கொண்டு போகிறது. சந்தானம் ஸ்ரீவில்லிப்புத்தூர் கதையைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். காலை ஏழிலிருந்து எட்டு. எல்லாவற்றையும் மனதில் குறித்துக் கொண்டு வந்து எழுதும் போது பல நுணுக்கங்கள் தொலைந்து விடுகின்றன. ஒரு voice recorder வாங்கலாம் என்று யோசிக்கிறேன். போகிற வேகத்தைப் பார்த்தால் ஆறே மாதத்தில் நாவல் முடிந்து விடும் என்று தோன்றுகிறது. 19-20-ஆம் நூற்றாண்டு ஸ்ரீவைஷ்ணவர்களின் … Read more
காலையில் நாலரை மணிக்கு எழுந்து விடுவேன். உடனே தியானம். பிறகு இஞ்சியை நறுக்கி இஞ்சி சாறு. கொஞ்ச நேரம் படிப்பேன். ஆறு மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்கா. ஒன்றரை மணி நேரம் நடை. பத்து நிமிடம் பிராணாயாமம். சரியாக எட்டு மணிக்கு நானும் ராகவனும் மகாமுத்ராவில் காஃபி குடிப்போம். ஸ்ரீவில்லிப்புத்தூர் நாவலுக்கு இப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஒன்பது மணிக்கு வீடு திரும்பியதும், உடனடியாக ஃப்ரீஸரில் இருக்கும் சுறா மீன் துண்டுகளை எடுத்து வெளியே வைத்து விடுவேன். … Read more
உப்புப் பெறாத சமாச்சாரம் என்பார்கள் அல்லவா? அப்படிக் கூட இல்லை… நம் உடம்பிலிருந்து உதிரும் முடி இருக்கிறதல்லவா, அதற்குக் கூட லாயக்கில்லாத சமாச்சாரம் என் அன்றாட வாழ்வை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. யாரோ ஒரு பெண் அதிரம்மியமான குரலில் உங்களுக்கு ஆக்ஸிஸ் வங்கி க்ரெடிட் கார்ட் வேணுமா என்றார். சரி என்றேன். கிடைத்தது. அதை நான் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன். ஒருநாள் ஏதோ ஒரு விமான டிக்கட் எடுக்க பயன்படுத்தித் தொலைத்து விட்டேன். டெபிட் கார்டில்தான் எல்லா வேலையையும் செய்வேன். … Read more
இடைவிடாமல் படிக்கவும், உலக சினிமாவைத் தேடிப் பார்க்கவும் என் நண்பர்களையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன். இரண்டு தினங்கள் முன்பு ராஜேஷை (கருந்தேள்) சந்தித்தேன். அராத்து, கணேஷ் அன்பு, மற்றொரு ராஜேஷ், முரளி ஆகிய நண்பர்களும் வந்திருந்தனர். அதிகாலை மூன்று வரை ஓடியது பேச்சு. ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. மற்றது அனைத்தும் மறந்து விட்டது. நாவலில் 1000 பக்கங்களைப் படித்து விட்டதாக அராத்து சொன்னார். பிறகு, படித்தது வரை தன் கருத்துக்களை அரை … Read more
கடந்த நாலைந்து தினங்களாக பூஜா என் வீட்டில் இருந்தாள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள். ஒருநாள் கடற்கரை, ஒருநாள் கோவில் என்று அவந்திகாவும் பூஜாவும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஸோரோ பூஜாவுக்கு ரொம்ப தோஸ்த் ஆகியிருந்தது. இப்போது பூஜா போனதும் ஏதோ உயிரே பிரிந்து விட்டது போல் சோகமாகப் படுத்திருக்கிறது. வியாழக் கிழமை அன்று ஏதாவது சினிமாவுக்குப் போகலாம் என்று திட்டமிடப்பட்டது. அவந்திகா சினிமாவுக்குப் போய் இரண்டு ஆண்டுகள் இருக்கும். அவளுக்கு சினிமா பிடிக்காது. ஆனாலும் பூஜாவுக்காகப் போகலாம் … Read more