மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (3)

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இருவரை நான் நீண்ட காலமாக முகநூலில் block செய்து வைத்திருக்கிறேன்.  காரணம், அவர்கள் முகநூலில் எழுதுவதைப் படித்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  மேலும், இந்த முகநூலால் நட்பு கெட்டு விடக் கூடாது என்ற முக்கியமான காரணமும் உண்டு.  அந்த இருவரில் ஒருவர் மனுஷ்ய புத்திரன்.  இதை ஹமீதிடமே போனிலும் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறேன். ஆனால் முகநூலில் ஒருவரை ப்ளாக் செய்தாலும் நம் நண்பர்கள் அவர்கள் எழுதுவதை மெயிலில் அனுப்பி மன … Read more

மீண்டும் மன்னிப்பு… (2)

நான் என்னுடைய நிலைமையை மிகத் தெளிவாக ஒரு குழந்தைக்குக் கூட புரியும் வகையில் எழுதியிருந்தேன்.  இருந்தும் மேலும் மேலும் பிரச்சினை கொடுத்தால் நான் எவ்வளவுதான் தன்னிலை விளக்கம் கொடுப்பது என்று புரியவில்லை.  அந்த இளம் எழுத்தாளரின் நாவல் வெளியீட்டு விழாவுக்கு வந்து அந்த நாவல் பற்றிப் பேசுகிறேன் என்று ஒப்புக் கொண்டேன்.  ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை.  ஆனாலும் ஏன் ஒப்புக் கொண்டேன் என்றால் அவர் முகநூலில் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனவே நாவலிலும் … Read more

ஒரு மன்னிப்பு (1)

நாவலைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை. படித்த பிறகு பேச ஒப்பவில்லை மனம். ஏனென்றால் நண்பர் என்பதற்காக என் மனசாட்சிக்குத் துரோகம் செய்து பாராட்ட  முடியாது.  மேலும், ஒரு புத்தக வெளியீட்டு விழாவின் போது வந்து அந்த நாவலைப் பற்றித் திட்டிப் பேசுவதை விட, ஒப்புக் கொண்ட பிறகு மறுத்தேன் என்ற கெட்ட பெயர் வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இது அந்த இளம் எழுத்தாளர் மீது நான் காட்டும் அன்பு. வேறு … Read more

நன்றி

டிசம்பர் 18 – என் பிறந்த நாளை  நண்பர்கள் வருண், கருப்பசாமி, செல்வகுமார் கணேஷ், பிரகாஷ், ரமேஷ், ஸ்ரீதர், சாம்நாதன், முருகன் கடற்கரை, கணேஷ் அன்பு, கௌரி ஷங்கர் (அதிமுக), சந்த்ரு, பாய், வெங்கடேஷ், தணிகை, டிமிட்ரி இவ்னோவ்ஸ்கி, டேய் மனோ, மனாசே ராஜா  மற்றும் பல நண்பர்களோடு முதலில் வத்தலக் குண்டுவிலும் பிறகு கொடைக்கானலிலும் கொண்டாடினேன்.  இது பற்றி பின்னர் விரிவாக எழுத இருக்கிறேன்.  டிசம்பர் 18 அன்று எனக்கு வாழ்த்து அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் … Read more

எக்ஸைல்

எக்ஸைல் சாருவை ஒருவர் ஏற்கலாம், நிராகரிக்கலாம். ஆனால் நிச்சயம் புறக்கணிக்க முடியாது. 30 ஆண்டுகளில் தொடர்ந்து இலக்கியவாதியாக, கருத்தியலாளராக சாரு முன்வைக்கும் கருத்துகள் ஒவ்வொன்றும் தீவிரமானவை. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மனச்சாட்சியின் குரலாக ஓர் எழுத்தாளன் தொடர்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துபவை. பொதுப்புத்தியில் உறைந்துகிடக்கும் மனோபாவத்தை எதிர்க்கும் குரலாக சாருவின் எழுத்து ஒலிக்கத் தொடங்கும்போதே அதனை ஒட்டியும் வெட்டியும் விவாதம் ஒன்று தொடங்கிவிடுகிறது. இது தமிழ் எழுத்துலகுக்கும் சமூகத்துக்கும் தேவையான ஒன்று. அந்த வகையில் சாரு இலக்கியவாதிகளால் … Read more

ஜனவரி 4

ஜனவரி 4-ஆம் தேதி தியாகராய நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் அராத்து எழுதிய தற்கொலைக் குறுங்கதைகள் என்ற நாவல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி. கலந்து கொள்வோர், மதன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் வசந்த், நீயா நானா ஆண்டனி. த்ரிஷாவிடம் கேட்டிருக்கிறோம். இன்னும் முடிவு தெரியவில்லை. எல்லோரும் பெரும் திரளாகக் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்… அன்றைய தினம் நான் தற்காலத் தமிழ் … Read more