அடியேனின் கட்டுரைகள்

அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் வேறு பத்திரிகைகளில் வெளிவரும் போது அதற்கு சாரு ஆன்லைனில் இணைப்பு தருகிறேன் அல்லவா? அப்போது அந்தக் கட்டுரைகள் பற்றி ஒன்றிரண்டு வரிகள் எழுதினால் 2000 பேர் அந்த லிங்கில் போய்த் தேடிப் படிக்கிறார்கள்.  ஆனால் நான் அந்தக் கட்டுரை பற்றி எதுவுமே எழுதாமல் வெறுமனே லிங்கை மட்டும் கொடுத்தால் 200 பேர் தான் படிக்கிறார்கள்.  என்ன கொடுமை இது!  இதுவரை நான் விகடனில் எழுதிய மனம் கொத்திப் பறவை தொடருக்குத்தான் மிக … Read more

தானாச்சூலி

சில வட இந்திய நண்பர்களின் அழைப்புக்கு இணங்க நவம்பர் 3 இலிருந்து 7 வரை உத்தர்காண்டில் உள்ள Dhanachuli என்ற கிராமத்தில் தங்க இருக்கிறேன்.  மொத்தம் 223 வீடுகள்.  அதுவும் ஒவ்வொரு மலையிலும் ஐந்தாறு வீடுகள் என்ற அளவில் விலகி விலகி இருக்கும் போல் தெரிகிறது.  மொத்த ஜனத்தொகை 1310.  எக்கச்சக்கமான பழத் தோட்டங்களும் உருளைக் கிழங்குப் பயிர்களும் நிரம்பிய இடம்.  தானாச்சூலியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் முக்தேஷ்வர் என்ற பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது.   நைனிட்டால், … Read more

அனுஷ்கா பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலே கண்டுள்ள கேள்விக்கு என்ன பாடுபட்டாவது சரியான பதிலைச் சொல்லி விட வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சி செய்து என் பதிலைச் சொன்னேன்.  அவ்வளவு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகும் சொதப்பி விட்டேன் என்று அந்திமழை ஆசிரியர் போன் செய்து சொன்னார்.  வேண்டுமானால் அந்தக் கேள்வியையும் அதற்கு நீங்கள் சொதப்பியிருக்கும் பதிலையும் நீக்கி விடவா என்று அன்புடன் கேட்டார்.  சே, சே, அதெல்லாம் வேண்டாம்.  நீங்களே ஒரு விளக்கத்தைப் போட்டு வெளியிட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இதோ … Read more

நீதி தேவதைக்கே அநீதியா? கடவுளை மனிதன் தண்டிக்க முடியுமா?

ஜெயலலிதா கைது, சிறைத் தண்டனை போன்றவை குறித்து வாசகர்கள் பலரும் கேள்விகளை அனுப்பியிருக்கிறார்கள்.  அதற்கான பதிலை ஸ்வராஜ்யா பத்திரிகையில் நேற்று எழுதியிருக்கிறேன்.  நேற்று தி இந்து தமிழ்ப் பதிப்பிலும் ஓரிரு வாசகங்கள் சொல்லியிருக்கிறேன். இப்போது எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில் ரஜினிகாந்த் பிஜேபியில் சேர்ந்து தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தைத் தீர்ப்பார் என்று தெரிகிறது.  செய்வார் என்று நம்புகிறேன். பின்வருவது ஸ்வராஜ்யா கட்டுரை: http://swarajyamag.com/featured/the-angel-of-justice-in-jail/

ஒரு காதல் கடிதம்…

புலி வேஷம் போட்டுக் கொண்டிருப்பவரைக் கண்டு புலி என நம்பி ஆஹா புலி ஆஹா புலி என்று கத்திக் கொண்டிருப்பேன்.  நான் பார்த்த புலியின் மகிமை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுவேன்.  நண்பர்களிடம் பரவசமாகச் சொல்லுவேன்.  பிறகு கொஞ்சம் நேரம் கழித்துப் பார்த்தால் புலி தன் மேக்கப்பைக் கலைத்து விட்டு ஓல்ட் மாங்க்கைக் குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும்.  எப்படி இருக்கும் எனக்கு?  பேசாமல் பதுங்கியபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன். இப்படிப்பட்ட சறுக்கல்களுக்காக … Read more