ஓ காதல் கண்மணி (4)

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் எனக்கு ஓ காதல் கண்மணி பிடிக்காது என எப்படி நினைத்தார்கள் என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை.  படத்தைப் பார்த்த போது நான் எழுதிய கதை ஒன்றை மணி இயக்கியிருக்கிறார் என்றே தோன்றியது.  அதில் உள்ள வசனம் எல்லாம் நான் எழுதியதோ என்று தோன்றியது.  படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்துப் பார்த்தேன்.  இன்னொரு முறையும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.  பார்ப்பேன். எனக்கு இன்னது பிடிக்கும் இன்னது பிடிக்காது என்று யூகிப்பதில் … Read more

ஓ காதல் கண்மணி (3)

கேள்வி: கணபதி-பவானி காட்சிகளை பற்றி கூறாமல் விட்டுவிட்டீர்களே சாரு? கருணாநிதி பதில்: அந்தக் காட்சிகள் என்னை அதிகம் பாதிக்கவில்லை.  ஒரு அன்பான கணவன் மனைவியிடம் மிகச் சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியதே அதெல்லாம்.  என்னிடம் பலரும் ”ரொம்ப எளிமையாக இருக்கிறீர்களே” என்று ஆச்சரியப்படுவார்கள்.  உண்மை பேசுவதும் அலட்டாமல் இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய, ஆச்சரியப்பட  வேண்டிய விஷயமாக இருப்பதே  எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உயிருள்ள ஒரு மனிதன் சுவாசிப்பதும், வாய் விட்டுச் சிரிப்பதும், அவனுக்குப் பசி எடுப்பதும் ஆச்சரியப்படத்தக்க விஷயங்களா? … Read more