Pithy thoughts – 1

என் எழுத்தைப் படித்தால் என்னை வெறுக்கவே தோன்றும். என்னை அனுபவிப்பவர்களால் மட்டுமே என்னைப் புரிந்து கொள்ள முடியும். நான் உங்களிடம் ஒரு குழந்தை தன் அன்னையிடம் பேசுவது போலவே பேசுகிறேன். அதனாலேதான் என் எழுத்தில் எந்தத் தணிக்கையும் இல்லை. அதனாலேதான் என்னால் சக ஜீவராசிகளுக்கு அன்னையாகவும் இருக்க முடிகிறது. அதனாலேதான் எந்தக் கூச்சமுமின்றி என் குழந்தைகளுக்கு உணவு அனுப்புங்கள் என்று கேட்கவும் முடிகிறது. ***

ராஸ லீலா கலெக்டிபிள்

இன்னும் சிலநண்பர்களுக்கு ராஸ லீலா கலெக்டிபிள் அனுப்பப்பட வேண்டியிருக்கிறது. கொரோனா காரணாகத் தாமதம் ஏற்பட்டது. பின்வரும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் நலம். சண்முகவேலு (கோவை) வினோபன் விக்ரம் காந்தி மற்ற அமெரிக்கவாழ் நண்பர்களுக்கு நூலை எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை. போக்குவரத்து சீரானால் யார் மூலமாகவாவது கொடுத்தனுப்ப இயலும்.