ஸ்மாஷன் தாரா – 2
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை துக்கமான துக்கம் ஆசையை விடு துக்கம் போகுமென்றானொரு ஆசான் விட்டேன் துக்கம் அகன்றது அப்போது வந்தாள் ஸ்மாஷன் தாரா என்ன வரம் வேண்டும் கேள் மகனே என்றாள் ஒரு ஐந்து நிமிடம் முந்தி வந்திருக்கக் கூடாதா உலகத்தையே கேட்டிருப்பேன் என்றேன் இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை கேளென்றாள் எதுவும் வேண்டாம் முடிந்தால் என்னோடு இரு என்றேன் அதற்கென்ன இருந்தால் போயிற்று என்றாள் கவிதை பிறக்கலாயிற்று