அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சஞ்சய் சுப்ரமணியம் அவர்களுக்கு,

வணக்கம்.  உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.  இருந்தாலும் கடைக்கோடி ரசிகனின் ஏதோ ஒரு மனத்தாங்கலை உங்களிடம் கொட்டி விடலாம் என்று எழுதுகிறேன்.  நான் சொல்வது முழுக்கவே தவறாக இருக்கலாம். இருந்தாலும் என் மனசாட்சி ‘இப்படி ஒரு பார்வையும் இருக்கலாம்தானே?  இதை சம்பந்தப்பட்டவரிடமே சொல்லி விடலாமே?’ என்று சொன்னதால் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு இதை எழுதத் துணிந்தேன்.  சமீபத்தில் ரா. கணபதி எழுதிய மகா பெரியவர் விருந்து என்ற நூலில் மகா … Read more

2021

2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது.  இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை.  எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா.  கோலாகலம்.  சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை.  அராத்து புத்தக வெளியீடு.  இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன்.  இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன்.  எனக்கு மிக … Read more